எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, August 18, 2026

daily worship - all setup

 விமலத் துறை வாழீ விப்பிரவதியாக
வீழல் சுடர் கண்ட வெஞ்சுடர் வழி வாழீ
கமலப் பிறை வாழி கண்டேத்தும் கரை வாழீ
கச்சிதமாய் வினை கழியும் காலக்கனி வாழீ
அமல னாதி குரம் ஆட்கொண்டார் மறை வாழீ
அத்தனைப் புரையும் அழியும் அனல் வாழீ
சுமலக் கோதுரையும் கண்டாமணி வாழீ
கலசத் திருவேதீ கனகப்பறை வாழீ
குமலத் தருங்குன்றம் குன்றாக் கழற்பீடம்
குஞ்சிதபாத வளி கூரத்தனும பதி
நிமலனாகி உரு நீழலே கதியாகி
நித்தியத் திருப்பாதம் நீங்கா அருள் தாராய். 1

ஓம் ராமநாம மூலதாரஸ்தாய வித்மஹே ராம மந்த்ர வரிவஸ்யா ரகஸ்யார்த்த கௌலிகார்த்தாய தீமஹி தந்நோ விதி ஹரி கிரிசை ஈட்யாய ஜய மாருதி ப்ரசோதயாத்

பாவங் களையும் பரிபாலா பகவான் கருடர் பதம் போற்றி 
பிணியை நீக்கும் பெருஞ்சுடரே பிரியா தருளும் பரமூலம் 
அமுதக் கலசப் பரிவேதி ஆறாப் பிணிவினை தீர்த்திடுமாம்
வேண்டத் தக்கது நீயறிவாய் பெரிய திருவடி அருளிடுவாய். 2

கருடக் குரவேத சாகை காரொளி விண்டவழி குந்தம் 
அருணம் மதிபேணும் வாலம் ஆழியப் பாலி வடமூலம் 
திருவாழி கடற்சயன ரங்கம் திருப்பாற் கடலுற்ற அமுதம்
கருநீழல் மருந்தாளிக் கோது 'க்ஷம்' என்ன தருகருட பீஜம். 3

"குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச 
விஷ்ணுவாஹ நமஸ்துப்பம் பக்ஷிராஜாயதே நம:"4

ஆதவ அனுமார் ஆழிமதிவிடை மாதவ ஜோதி, 
ஐந்தவர் சக்திகூடம் ஆகவே கருடக் காப்பு!*

ஓம் ஓம் ஓம் உத்கீதம் ஓம் . 5

ஓம் தத்புருஷாய வித்மஹே விஷ்ணு  வாஹனாய தீமஹி 
தன்னோ ஸ்ரீகருட ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சி தேவாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்... 

ஓம் நாக த்வஜாய வித்மஹே சங்கு சக்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸ்வர்ண கருடப் பெருமாள் ப்ரசோதயாத் 6

"அறிந்த வினையோ அறியா கர்மம்
 எவ்வினை யாவும் அடியொடு தீரும் 
அருதிருமார்கம் அறிவீர் உலகீர் ...
தனித்தொரு சித்தம் ஒருமனத் தொன்ற
சிவத்திரு நாமஞ் ஜபித்திடல் வேணும்
அரசிவ நாமம் உருகிடப் பேணீர்!” 7

சிவ ராம நாம மந்திரம்,  சிவ ராம நாம ஜீவனம் 
சிவ ராம பாத சேகரம், சிவ ராம நந்தி ஈஸ்வரம்!

எடுத்த சீவனைக் காக்கும் புலத்தால், 
தொடுக்கும் பிறவி ஏதில்லா தாக்கல் 
விடுத்த சித்த(ர்) குலச் சாதனமன்றியே 
பிராண உபாயம் (உபயம்) வேறொன்றில்லையே

பொதியமுனிப் புலஞ்சோறு போழச் சிவபாதர், 
கதித்த கதிமாற்றி சிவத்தை விதிக்கின்ற, 
உதித்த சித்புருட தாரக பவனமதில், 
வதிக்கும் பண்டோர்க்கு தருகற்ப அருளீசம். 8

ஒஃம் தத்சத் பரமகுரு ஜோதி பிரகாசாய வித்மஹே 

குருமங்கள பரமேஸ்வர கைவல்யாய தீமஹீ 

தந்நோ வேங்கடராம சித்புருஷ மஹராஜ் ப்ரசோதயாத். 


கனகக் கழலும் கல்லாகி,
கல்லே கனகக் கனலாகி,
கனலே கழலாய்க் கனகாகி,
கழலே கனகக் கல்லாகி,
கழலுங் கல்லுரு கணமாகி,
கணமே கழலெனக் கனலாகி,
கழலும் கணமாய் கழலாகி,
கனலும் கல்லுக் கனகாகி,
கழலரு ணாசலக் கனலொளியே! 9

ஓம் தத்ஜலதேவதாய வித்மஹே சர்வ தீர்த்தப் ப்ரவாஹாய தீமஹி 
தந்நோ கோமுக பூஜபதி ப்ரசோதயாத்

ஓம் மாதாபலாயை ச வித்மஹே மந்த்ர தேவதா
தேஹாயைச தீமஹி தந்நோ ஸ்ரீகோ தேவி ப்ரசோதயாத் 10

வாஞ்சா சிந்தாமணி சித்த சியாமள காந்தீ மந்த்ரம்
சிவபரபரசிவமய: சியாமள ஏககாந்தீம்
ஓம் ஹ்ரீம் அதிரூட மஹாபாவன மாதனீ 
உஜ்ஜ்வல ஹ்லாதினீ ராதாயை ஸ்வாஹா 
கிருஷ்ணார்ப்பணம் சிவார்ப்பணம்

ராதத்துவ சோதித்துவ மாகத்துவ பரலீ
பேதத்துவ ஆதத்துவ வேதத்துவ வரளீ
காகத்துவ சாதத்துவ கோதத்துவ குறளீ
மேதத்துவ போதத்துவ கிருட்ணத்துவ ராதை 11

வேத நாடியே ஜீவ நாடி
ஜீவ நாடியே சிவ நாடி
சிவ நாடியே உயிர் நாடி

"காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா 
புத்யாத்மநா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்கரோமி
 யத்யத் ஸகலம் பரஸ்மை 
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி"
ஓம் ஜீவநாராயண ஸ்வரூப பித்ரு தேவாய வித்மஹே
வசுருத்ர ஆதித்ய தேவாய தீமஹி 
தன்னோ பித்ரு தேவ ப்ரசோதயாத்

ஓம் பித்ரு ப்ரசன்ன பூம்யாய வித்மஹே
ஜெயக்ஷீராஸ் நாமாய தீமஹி

 தந்நோ பித்ரு மூர்த்தி ப்ரசோதயாத்


ஓம் வசு ருத்ர ஆதித்யாய வித்மஹே 

பித்ரு ஜோதி ஸ்வரூபாய தீமஹி 

தன்னோ பித்ரு மூர்த்தி சாதக ப்ரசோதயாத் 


ஓம் யக்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி 
தன்னோ குபேர ப்ரசோதயாத்

ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய 
தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம்மே 
தேஹி தாபய ஸ்வாஹா!

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே 
நமோ வயம் வைஸ் ரவணாய குர்மஹே
ஸ மே காமாந் காமகாமாய மஹ்யம் 
காமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாது 
குபேராய வைஸ்ரவணாய ..... 
 ....  மஹாராஜாய நமஹ: 12

 'பாரப்பா இத்தி ஆல் வேம்பரசு வேங்கை 
ஆரத்துப் புங்கை அத்தி நுணா புரசாலம்
 கூரத்துப் பனை தென்னை குற்றாலப் பலா வாழை
 வாரமகிழ் புன்னை விருட்டபா லீஸ்வரனே!'


'மூலதே ப்ரம்ஹ ரூபாய 

மத்யதே விஷ்ணு ரூபிணே 

அக்ரதே சிவரூபாய 

வ்ருக்ஷராஜாய தே நமஹ' 13


மாஹேஸ்வர சூத்திரப்பாசுரம்
அஇஉ அக இருஃபா உகரம் 
ரு லு என்பார் ருத்ரங் கழலன்
 ஏஓ என கண ஏகம் ஓதல் 
ஐஔ வரமது சிகி வாஹனனே 
ஹயவர அரணாய் அரிஅய ஹரிணீ 
லம்ப உதரக லக்ஷண கணபதி 
ஞமஙண நத்தம் ஞாதா ஞேயம் 
ஜப ஜப் பேசன் ஐயாறதனில்
ஜபகட தத்தம் கடஜப தத்தம்
கடதப கடமா தவபல ஜோதி
கபசட தசட தசபட படகம் 
கபர்த்தீஸ் வரனா கமவை தீகம் 
சஷஸம சாமம் சாம்பமஹேஸா 

ஹரஹர நமஹ பார்வதி பதயே! 14

 தாரா பலன், சந்த்ர பலன் 
சந்த்ராதித்ய சப்தாவர்ண
 சுக்ரஸ்வேத வித்யாபலம்
 சுபம், சுபம், சுபம்

"விடிவெள்ளி விதானத்தில் 
வெள்ளியம்பதிப் பிரான் காண
 விமலச் சந்த்ராதித்யம் மேவி 
விதர்ப காலச் சித்தர் பூசை மேவ 
விரியட்டும் பூ தாரண நல்வரங்கள்!" 15

ஓம் தத் சர்வபூம்ய தேவதா கடாட்சாய வித்மஹே சர்வலோக ரட்சகாய தீமஹி தந்நோ சர்வபிரபஞ்ச தேவதா பரிபாலேஸ்வர ப்ரசோதயாத். 16

daily worship - sivan


தோடு டையசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்
காடு டையசுடலைப் பொடி பூசியென் னுள்ளங் கவர் கள்வன்
ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த அருள் செய்த
பீடு டையபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.1

முற்ற லாமையிள நாகமோ டேனமுளைக் கொம் பவைபூண்டு
வற்ற லோடுகல னாப்பலி தேர்ந்தென துள்ளங் கவர் கள்வன்
கற்றல் கேட்ட லுடை யார்பெரி யார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்ற மூர்ந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

நீர்ப ரந்த நிமிர் புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்ப ரந்தயின வெள்வளை சோரஎன் உள்ளங் கவர்கள்வன்
ஊர்ப ரந்தவுல கின்முத லாகிய ஓரூரிது வென்னப்
பேர்ப ரந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.  2

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே. 3

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே. 4

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு 
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச் 
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் 
குன்றுடையானைக் கூறஎன் உள்ளம் குளிரும்மே. 5

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.6

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே 
அன்பினில் விளைந்தஆ ரமுதே 
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் 
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த 
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் 
பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 7

சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும் 
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் 
சிவசிவ என்னச் சிவகதி தானே. 8

அறிவானும் தானே அறிவிப்பான் தானே 
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற 
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன் 9

கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி, 
அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிறத்தின் மேலாம்,
சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று,
பொற்புடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி போற்றி! 10

உடையாள் உன்தன் நடுவிருக்கும் 
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் 
இருப்பதானால் அடியேன்உன்அடியார் 
நடுவுள் இருக்கும் அரு ளைப்புரியாய்
பொன்னம்பலத்தெம் முடியா முதலே 
என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே. 11

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி! பாகம் பெணுரு ஆனாய் போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே போற்றி! சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி! ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி! சீரார் திருவையாறா போற்றி!
உத்தரகோசமங்கைக்கு அரசே  போற்றி போற்றி!
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி! இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி!
குவளைக் கண்ணி கூறன் காண்க! அவளுந் தானும் உடனே காண்க!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி! 12

ஆதியாம் சப்தரிஷிமார்களோடு அருள்பூண்ட பதினென்பேர் பாதம்போற்றி!
சேதியாம் மூத்ததொருமுனிவர் மூதோர் செப்பரிய பெரியோர்கள் சுகத்தாள் போற்றி! 
நீதியாம் ரவியொடுமதியும் தேவர்நிலையான மூவருடன் இனணகள்போற்றி! ஜோதியென சென்னிமீதுஉறையும் கலைகள்ஓதுவித்த குருவடிகள் போற்றி!போற்றி!

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 13

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.14

ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.15

கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய்
 மறைக்கப் பாலாய் எல்லாமா யல்லதுமா யிருந்ததனை 
யிருந்தபடி யிருந்து காட்டிச் சொல்லாமங்ற 
சொன்னவரை நினையாம னினைந்து
பவத் தொடக்கை வெல்வாம். 16

daily worship - vishnu


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
 நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
 அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே. 1

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
 திருப்பவளச் செவ்வாய்தான் தித்திக் திக்குமோ 
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் 
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. 2

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் 
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
 இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே. 3

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான் 
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று 
கருவரங்கத் துள்கிடந்து கைதொழுதேன்
கண்டேன் திருவரங்க மேயான் திசை. 4

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற் றிலையுமெல்லாம் 
கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி, 
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி, 
திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே. 5

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் 
தேனார் பூஞ்சோலைத் திருவேங் கடச்சுனையில்
 மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே. 6

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி 
நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
 உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு நல்வகையால் 
நமோநாராயணா என்று நாமம் பல பரவி
பல்வகையாலும் பவித்திரனே! 
உன்னைப் பல்லாண்டு கூறுவனே. 7

நல்வகையால் நமோ நாராயணா வென்று நாமம்
 பல பரவி பல்வகையாலும் பவித்திரனே 
உன்னைப் பல்லாண்டு கூறுவனே!  8