ருத்ரயாமள தந்திர நூலின் 64 பைரவர்கள்
காலத்தின் தத்துவத்தை உணர்ந்த பண்டைய ரிஷிகள் காலத்திற்கு பலவகையான ரூபப்பேதத்தையளித்தார்கள் . காலபைரவம் என்ற பரசிவத்திலிருந்து எட்டு அங்கங்களாய் அஷ்ட மஹா பைரவர்கள் உருவானார்கள். அந்த அஷ்ட மஹா பைரவர்களே அஷ்ட வித்யேஸ்வரர்கள் எனப்பட்டனர். மஹாமர்த்தனபைரவர், பஞ்சவக்தபைரவர், ரவிபர்கபைரவர், ஏகாநந்தபைரவர், மஹாசண்டபைரவர், நமோநிர்மலபைரவர், டமருபா!கரபைரவர், பட்காரபைரவர் என்ற எண்மார்களே அணிமா, மஹிமா, லஹிமா, கரிமா, ப்ராப்தி, ப்ரஹாம்யம், ஈசத்துவம், வசித்துவம் போன்ற எண்வகை சித்திகளை தன்னை வேண்டும் உயிர்களுக்கு வழங்குகின்றார்கள். அந்த எண்வகை சித்திகளும், எண்வகை தீயகுணங்கள் விலகினால் மட்டுமே உயிர்களுக்கு கிட்டுகின்றது. எண்வகை விகாரகுணங்களான காமம், குரோதம், மதம், மாச்சர்யம், உலோபம், மோகம், இடும்பு போன்றவற்றை விலக்கவே அஷ்ட பைரவ மண்டலங்கள் உருவாக்கப்பட்டன.
அசிதாங்கம் முதல் சம்ஹாரம் வரை பைரவரூபங்கள் காலப்பைரவத்திலிருந்து எட்டாக பிரிந்து அவை ஒவ்வொரு மண்டலங்களாக ஒவ்வொரு தொகுதிக்கும் எட்டு 64 பைரவர்காளாகி மொத்தம் 64 பைரவர்களாய் அஷ்டாஷ்ட பைரவர்கள் என்றை அஷ்டாஷ்ட பைரவர்களும் என்றழைக்கப்படுகின்றனர். அவர்களது துணை சக்திகளாம் தேவிகள் சதுசஷ்டி யோகினிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த 64 பேரும்
64 கலைக்ஞானங்களையும், 64 சித்திகளாகவும், 64 தந்திரகலைகளாகவும், வீரம், கருணை, ஞானம் என்ற பைரவ அம்சத்தோடு உலக உயிர்களுக்கு அருள்கின்றார்கள்.
சிவாகமங்கள் 28ல் பைரவரைப்பற்றி குறிப்பிடும் ஆகமங்களில், 64 பைரவர்களை பற்றி குறிப்புகள் இருந்தாலும், அவருடைய நாமங்கள் ஒவ்வொரு ஆகமங்களிலும் பேதப்படுத்தபட்டிருக்கும். ருத்ரயாமளம் என்ற தந்திரநூலின்படி 64 பைரவர்களும், அவர்தம் யோகினிகளும் அன்பர்கள் அறிந்து தெளிந்து கொள்ளும் முறையில் திருஆலவாய் பைரவ மண்டலம் இங்கே வழங்கின்றது. 64 பைரவர்களையும், அவர்தம் யோகினிகளையும் முறையே தியானிப்பதால்
முதற்கணம் (அசிதாங்கபைரவர்) -மூலாதாரம்
இரண்டாம் கணம் (ருரு பைரவர்) - மணிபூரகம்
மூன்றாம்கணம் (சண்ட பைரவர்) -மணிபூரகம்
நீலநிறமேனியுடன் மிக்க அழகுடயவராய் நான்கு கரங்களிலும், அழல், கதை, குண்டிகை, சக்தி ஆகிய படைக்கலன்களை தாங்கியோராவர். இவர்களின் தலைவர் 1)சண்டபைரவர், இவருடன் 2)பிரளயாந்தகர், 3)பூமிகம்பர், 4)நீலகண்டர்,
5)விஷ்ணு, 6)குலபாலகர், 7) முண்டபாலர், 8) காமபாலர் என்னும் எண்மராவர். இவர்களின் தொகுதி சண்டபைரவர் மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.
நான்காம்கணம் (குரோதபைரவம்) -அநாகதம்
இந்த தொகுதியினர் சாம்பல்நிற மேனியர்,நான்குகரங்களில் வாள், கேடயம், ஈட்டி, கோடாரி போன்ற படைக்கலன்களை தாங்குபவர்கள். இவர்களின் தலைவர் 1) குரோதபைரவர் இவருடன் 2)பிங்கலேர்ணர், 3)அப்பிரரூபர் 4)தராபாலர்,
5)குடிலர் 6) மந்திரநாயகர், 7)உருத்திரர், 8)பிதாமகர் என்னும் எண்மராவர். இவர்களின் தொகுதி குரோதபைரவ மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.
ஐந்தாம்கணம் (உன்மத்தபைரவர்) -விசுத்தி
இந்த தொகுதியினர் வெண்ணிறத்தினர், நான்குகரங்களில் குண்டிகை, கேடயம், பரிகம், பிண்டிபாலம் போன்ற படைக்கலன்களை தாங்குபவர்கள். இவர்களின் தலைவர் 1) உன்மத்தபைரவர் இவருடன் 2)வடுகநாதர், 3)சங்கரர்,
4) பூதவேதாளர், 5)திரிநேத்திரர், 6)திரிபுராந்தகர், 7)வரதர்,
8)பர்வதவாசர் என்னும் எண்மராவர். இவர்களின் தொகுதி உன்மத்தபைரவர்மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.
ஆறாம்கணம் (கபாலபைரவம்) - சிரசு மத்தியில்
இந்த தொகுதியினர் மஞ்சள்நிற மேனியர், நான்குகரங்களிலும் குண்டிகை, பலகை, கதை, பிண்டிபாலம் போன்ற படைக்கலன்களை தாங்குபவர்கள். இவர்களின் தலைவர் 1)கபாலபைரவர் இவருடன் 2)சசிபூஷணர், 3) ஹஸ்தி சர்மாம்பரதரர், 4)யோகீஸர், 5)பிரம்மரார்ஸர், 6)சர்வக்ஞர்
, 7)சர்வதேவேஷர், 8)சர்வபூத ஹ்ருதிஸ்திதர், என்னும் எண்மராவர். இவர்களின் தொகுதி கபாலபைரவர்மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.
ஏழாம்கணம் (பீஷணபைரவர்) - லலாடம்
எட்டாம்கணம் (சம்ஹாரபைரவர்) - சிரசு மத்தியில்