எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, March 18, 2014

சத்குருவை அறியும் பாங்கு

**** "சத்குருவை அறியும் பாங்கு " பற்றி ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழியிருந்து ஒரு குறிப்பும் 

****சர்வ கோடி சித்தர்களின் பீடாதிபதி அகத்தியெம் பெருமான் "ஜீவ அருள் நாடியில் " "குரு என்றால் .. பற்றி " உரைத்ததையும் நாளைய பதிவிடுகிறோம் ., மிக முக்கியமான பதிவு ....,

===============================================

குறிப்பு : ஜீவநாடி என்பது வேறு பெறு விரல் ரேகை வைத்து நாடி பார்ப்பது வேறு ..., ஜீவநாடி பற்றி முழுமையான முகவுரை பற்றி அறிய "சுகர் ஜீவ நாடி அற்புதங்கள் " புத்தகத்தில் வரும் முதல் 26 பக்கங்களை படித்திடல் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம் ... மேலும் சுகர் ஜீவ நாடி அற்புதங்கள் " புத்தகத்தில் இருந்து ஒரு ஆச்சரிய பதிவை முன்பே பதிவிட்டிருந்தோம் ., படிக்காதவர்கள் august 30th timelineல் பார்க்கவும் ..நன்றி  

===============================================
 
"ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ,
அகத்தடியாள் மெய் நோவ, அடிமை சாக,
மா ஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட,
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சா வோலை கொண்டு ஒருவன் எதிரே செல்லத்
தள்ள ஒண்ணா விருந்துவரச், சர்ப்பம் தீண்டக்
கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்,
குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே "




*பொருள்* : "ஆவென்று மழை கொட்ட, வசிக்கும் வீடு இடிந்து விழ, வீட்டில் மனைவி உடல் வலியால் துடிக்க, அடிமை என்னும் மாடு சாக, விதை மட்டுமே வீட்டில் இருந்ததால் அதை விற்க ஓட, வழியில் கடன் கொடுத்தவன் வழி மறித்து நிற்க, அந்த நேரம் பார்த்து நெருங்கியவர் மரண செய்தி வர, இந்நிலையில் காலில் பாம்பு தீண்ட , முக்கியமான விருந்து வர , அரசன் நிலத்தை உழுது உண்டதுற்கு வரி கிஸ்தி கேட்க, குருவும் எதிரே தோன்றி தட்சணை தாவேன்றாரே"இப்படி பட்ட துயரமான நிலையில் குரு வசிஷ்டர் தட்சணை கேட்க, அந்த குடியானவன் கையிலிருந்த விதையை வேறு எதுவும் செய்யாது குருவின் கையில் குடுத்து "அய்யனே, குருவே நீ தான் என்று சரணாகதி அடைந்தான்". அவ்வாறு செய்தவுடன் அவன் எல்லா துன்பமும் உடனே காணமல் போனது என்று கிராம வழி கதை உள்ளது.

எத்தனை துன்பம் வந்தாலும் குருவின் வழி நிற்கவேண்டும். ஞான வழி காட்டும் குரு நம்மிடம் எதிர்பார்ப்பது காசு பணம் இல்லை. அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது வைராகியம், ஒழுக்கம் மற்றும் அசையாத நம்பிக்கை தான். இந்த மார்கத்திற்கு தடையாய் உள்ள நம் பழக்கங்களை விடுவதே அவர்களுக்கு செலுத்தும் சிறந்த குரு காணிக்கையாகும் .

                                              -- (ஒரு வலைத்தளத்தில் படித்தது ....,)

No comments:

Post a Comment