இதுவுமே “ ஓணக் கீரப் பரிமழம்” , தானாய் இயற்க்கையாய்க் கனிவது . இது
இல்லையெனில் உலக ஜீவ இயக்கம் ஒரு போதும் சரியாக இயங்காது . இந்த “ஓணக்
கீரப் பரிமழ” சக்தியை மனித குலம் பெற்றிட திருவோண நட்சத்திர நாள் விரதம்
உதவும்.
மனிதர்களுக்கு ஏனைய உயிர்களுக்கும் ,பாமரர்களுக்கும்
இது எவ்வாறு கிட்டும் ? இதற்காகவே சித்தர்கள் , மாமுனிகள் தம் திருவோண
நாளின் விரத பலன்களை யாவர்க்கும் அர்ப்பணிக்கின்றார்களே ! இவர்களே உலகின்
உண்மையான தியாகிகள்...!!!
திருவோண நட்சத்திர நாளுக்கான விரதாதி பலன்கள் நிறையவே உண்டு .
கலியில் ஒருவர் மனிதில் அடிக்கடி ஏற்படும் அல்லது மனதில் உண்டாக
இருக்கின்ற தீய எண்ணங்கள் தாமாகவே இயற்கையாகவே விடுபட்டு அதற்கு பதிலாய்
நல்ல எண்ணங்கள் முளைத்து மலர்வதற்க்கும் . திருவோண நாள் விரதம் உதவும் .
அதாவது மனத் தூய்மை இதில் ஸ்திரம் பெறும்.
மனித உடலில் உள்ள
“ஓணத் துழாய்” எனும் அரிய நாடிகள் திருவோண நட்சத்திர நாளில் மகத்தான
முறையில் ஆக்கம் பெறுவனவாகும் .இந்நாடிகள் மனித சரீரத்திலும் ,
பரவெளியிலும் பல துறைகளிலும் பயன்படுவதாம்
ஓணத் துழாய் நாடி என்றால் என்ன ?
நாடி என்பது சித்த வைத்தியம் முதல் , சோதிடம் ஈறாக மட்டும் அல்லாது ,
இன்னும் பல துறைகளிலும் கை வரப் பெற்று ,பல அர்த்தங்களில் சமுதாய
நடைமுறையிலும் மிளிர்வதாகும் , ஆனால் நடப்பு உலகச் சமுதாயத்தில் ,மக்கள்
சமுதாயம்
விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு வருவதால் – உடல்
நாடி இயக்கம் அறிந்து மருந்தளிக்கும் சித்த முறையை கடைபிடிப்பதும் குறைந்து
வருகிறது .. நாடி சோதிடமும் தற்காலத்தில் பெரிதும் பிராபல்யம் அடைவதால்
நாடி என்றாலேயே மருத்துவப் பூர்வ நாடி கூட நினைவுக்கு வராது , “ நாடி
சோதிடம்” என்று மட்டுமே பலருக்கும் முதலில் மனதில்படுகின்றது ...,
நாடி சோதிடத்திலும் , புனிதமான உண்மையான ஓலைச் சுவடி நாடிகள் தற்காலக்
கலியில் மிகவும் அரிதாகி வருகின்றன . மாத சிவராத்திரி நாளுக்கும் ,
இத்தகைய ஓலைச் சுவடிகள் நாடி வாக்யமார்கமாய் வார்க்கும் கர்மவினைத் தெளிவு
மண்டலத்திற்கும் நெருங்கிய ஆன்மப் பினணப்பு உண்டு.
••• இத்தகைய
கால சக்தி ஆன்ம ரகசியத்தை நன்கு அறிந்தவர்களால் தாம் , துல்லியமாய் ஓலைச்
சுவடி நாடி வாக்கியங்களின் சூக்குமத்தை அறிந்து உணர்த்த முடியும் . இதற்கு
உதவுவதும் “ தாளதள ஓணத் துழாய்” எனும் நாடி வகைகள் ஆகும். ஆனால் இதனை
அடைதற்குக் கடுமையான நியதிகளை கடைபிடித்தாக வேண்டும் நல்லொழுக்கமும்
இதற்கான மூலமே !!!
மிருகங்கள் ,தாவரங்கள் போன்று ஒவ்வொரு
ஜீவகுலப் பேச்சையும் புரிந்து கொள்ள உதவும் வகைப்பாடுகளும் “ ஓண
துளத்துழாய் “ எனும் அரிய நாடி வகைகள் தாம் ...,
மொழியறிவு
மட்டும் அல்லாது , தீர்க தரிசனம் , தீர்க ஞானம் போன்ற பரவெளி ஞானத்திற்கும்
, ஓணத் தளித் துழாய் எனும் விசேஷமான நாடிவகைகள் உதவும் . இவ்வாறு மனித
சமுதாய நலனுக்கென உள்ள நாட்கள் பலவிதம் , பலவும் மானுடக் கபால வழியில்
இயங்ககுவன ..,
இதற்கான இயக்க சக்திகள் பலவும் பரவெளியில்
இருந்தும் கிட்டலாகும் . தாவரங்களும் இதர ஜீவன்களுடன் பேச வல்லவையே !
விஞ்ஞானத்திலும் இதை ஏற்கின்றார்கள் !!
தாவரத்தின்
உரையாடலையும் புரிந்து கொள்ள உதவும் மனித குலத்து ஆறாம் பகுத்தறிவின் ஒரு
வகை நாள நாடிக்கும் “ ஓணத் தும்பித் துழாய்” என்று பெயர் ...,!!!
இவ்வகையான “ ஓணத் துழாய்” நாடி அம்சங்கள் பலவும் , திருவோண நட்சத்திர நாளில் நன்கு மலர்கின்றன ...!
இதுவுமே தலையானதாய் இங்கு விளக்கப் பெறும் சித்சக்திப்பூரணம் ஆகும்...
மேலும் “ ஓணப் பரிமழம்” என்றால் எளிமையாய் தீர்கத்துடன் , எதையுமே
சொல்லும் முன்னரேயே சட்டென்று புரிந்து , அறிந்து , உணர்ந்து கொள்வதாகும்
.. கற்பூர புத்தி என்று இந்த அறிவு நுணுக்கத்தைப் போற்றுவர்...,
ஓணப்பரிமழ சக்திகள் பரிமளிக்கின்ற , பரிணமிக்கின்ற , பரிபூரணிக்கின்ற ,
திருவோண நட்சத்த்திர நாளில் , நீங்கள் ஆற்ற வேண்டிய முக்கியமான கடமை என்ன
?????
“திருவோண விரதப் பா”சுரத்துடணான பூரண விளக்கங்களுக்கு ஆகஸ்ட்2011 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழை காண்க....,
No comments:
Post a Comment