எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, January 29, 2016

ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்

♫♫♫♥♥♥ ராமர் வாழ்ந்த காலத்தில் நாம் இல்லை. கிருஷ்ணரின் லீலைகளைக் காண எனக்குக் கொடுத்து வைக்க வில்லை. லலிதா பரமேஸ்வரியை நான் பார்த்ததே இல்லை. மீனாட்சி திருமணம் எவ்வளவு கோலாகலமாக நடந்திருக்கும்.அந்தப் புனிதமான நேரத்தில் நாம் மதுரையில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

♫♫♫♥♥♥ இத்தகைய ஏக்கங்கள் எல்லாம் உங்கள் அடி மனதில் எழுகின்றனவா? நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது திருஅகஸ்திய குருகுலத்தை அடைவதுதான். உங்கள் ஆன்மீக ஏக்கங்கள் அனைத்தையும் நீக்கும் ஒரே தெய்வீக நீரூற்று திரு வெங்கடராமன் அவர்களின் அருள் மொழிகளே.


♫♫♫♥♥♥ திருக்கயிலாயத்திற்கு இணையான பக்திப் பரவசத்தில் நீங்கள் மூழ்கித் திளைக்க வேண்டுமா? நீங்கள் உடனே வர வேண்டிய இடம் திருஅகஸ்திய குருகுலம். இறை பக்தி என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? 



♫♫♫♥♥♥ ராமகிருஷ்ணர், ரமணர், சேஷாத்ரி போன்ற மகான்கள் தங்களை மறந்து, தங்கள் உடலை மறந்து மூழ்கித் திளைத்தார்களே அந்த இறை இன்பம் எப்படித்தான் இருக்கும் என்பதை உங்கள் கண்ணால் காண வேண்டுமா? உங்களுக்கு இறைவன் இந்த வாழ்க்கையிலே அளிக்கும் சந்தர்ப்பம். உடனே திருஅண்ணாமலை வாருங்கள்.



♫♫♫♥♥♥ R.V வெங்கடராமன் அவர்கள் நமது நல்வாழ்விற்காக வழங்கிய அருளுரைகளை, ஆன்மீகச் சொற்பொழிவுகளை நமது பூமியின் காலக் கணக்கில் கணக்கிட்டால் அவை 700000 மணி நேரத்திற்கும் மேற்படும். அவற்றை எல்லாம் எடுத்துரைக்க இந்தச் சிறு வெப்சைட்(kulaluravuthiagi.in)  எழுகடல் மணல் பரப்பிலும் ஒரு சிறு துளி துகளாக இறை அருளால் செயல்படுகிறது.



♫♫♫♥♥♥ எமது ஆஸ்ரமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உத்தராயண தட்சிணாயன படிக்கட்டுகளின் இரகசியங்களைக் கூறுவதென்றால் மனிதக் கணக்கில் 2400 ஆண்டுகள் வேண்டியிருக்கும் என்று ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் போகர் உரையாடலின் மூலம் நாம் அறிகிறோம். அகஸ்திய நாடிகளில், படிக்கட்டு மகிமையைக் கூற 300 ஆண்டும் முப்பாதியே என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒன்றில் பாதி முதல் பாதி, அதில் பாதி அதாவது அரையில் பாதி கால், அது இரண்டாவது பாதி. அதில் பாதி மூன்றாவது பாதி. அது அரைக்கால். இந்த அரைக்கால் பாகம் 300 ஆண்டுகள் என்றால், மொத்தம் 2400 மனித ஆண்டுகள் என்பது குறிப்பு. இத்தனை சிறப்பு வாய்ந்த படிக்கட்டுகளின் ஒரு சில மகிமைகளைப் பற்றி இங்கு விளக்கம் அளிக்கிறோம்.


♫♫♫♥♥♥ FOR MORE GREAT DIVINE FACTS DARSHAN : www.kulaluravuthiagi.org


No comments:

Post a Comment