§
அருணாசல தீபஜோதியில் ஃஎழுத்தின் அமிர்த
சக்தியும் , எண் பதிமூன்றின் அமிர்த ப்ரவாகமும் , அமிர்த ஃபல ஸ்தான சக்திகளோடு பொழிவதால் ,
ஆழ்ந்த நம்பிக்கையுடன் அருணாசல ஜோதியை
தரிசித்து , அமிர்தமயத் திருவருளையும் பெறுவீர்களாக.
§
அமிர்தசக்தி
வஸ்துக்களான ஃ எழுத்து , எண் பதின்மூன்று இரண்டையும் தற்காலத்தில் பலரும் ஒதுக்கு
வருவது சரியல்ல ..., இனியேனும் இவ்விரண்டின் ஆன்ம சக்தி , ஆத்மப் பரிசுத்தம் ,
அமிர்த வளத்தை உணர்ந்து , தினமும் ஒரு சில முறையேனும் எழுத்தில் , பேச்சில் , பயன்படுத்தி வரவும்...,
§
மழைப்பொழிவில்
பதின்மூன்று , பதின்மூன்று துளித் தொகுகித் கொத்துக்களாய் வான்மழையை வருண மூர்த்தி
, வர்ஷிக்கின்றார் .., இது அதியற்புதமான “த்ரயோதஸ்ச வர்ஷம்” எனும் மெய்ஞ்ஞான விஞ்ஞான விளக்கம் ..., இவையாவும் அஷ்டவக்ர ரிஷியின் “மதிமத்த்வமதி” எனும் சூக்கும கிரந்தங்களில் பொலிவன..
§
எனைய த்வ்யபிரபந்த
விளக்கங்களுக்கு . 2016*டிசம்பர் மாத ஸ்ரீஅகஸ்திய விஜய இதழை காண்க....
§
========================================================================
§
ஃ எழுத்திற்கு அகர உகர மகரக் கொந்துகை என்ற
பெயரும் உண்டு. கொந்துகை என்பது ஃ எழுத்தின் மத்தியில் உள்ள கடுவெளி...,
அ , உ , ம
ஆகிய மூன்று பிரணவாகார ஒளியொலிப் பீடங்கள் சேர்ந்தது தான் ஓம் எனும்
ஓஃங்காரம் அல்லவா ..., பிள்ளையார் சுழியான “உ” என்பதும் ,ஓங்கார பீட்த்தைச் சார்ந்த்தே .,
§
ஃஎனும் ஆயுத எழுத்து , பிரணவ எழுத்து என்றும் சிறப்புடைந்துள்ளது.., பிரணவம்
எனப்படும் ஓஃங்கார பீடத்தின் மூல வடிவைக் கொண்ட ஃஅட்சரத்திற்கு , ஆயதன எழுத்து
என்பதே ஆதிகாலப் பெயர் ., ஆயதனம் என்றால் நீங்காத செல்வம் (தனம்) நிறைந்து ,
சாசுவதமாய் விருத்தியாகிப் பரிணமிப்பது என்றும் பொருளாகும்...,
§
தற்காலத் தமிழ்ச் சமுதாயம் ஆயுத எழுத்தை மறந்தாலும் , இதன் ஆயதனசக்தி என்றென்றும் மறைவதில்லை..,!!!
§ பரம்பெருளாம் ஸ்ரீமன் நாராயணப் பெருமாள் முக்கோணப் பீடத்தில் நின்று , இருந்து
, கிடந்து , நடந்து அருள்வதாய் ஐதீகம் .., பெரியாழ்வாரின் “பல்லாண்டு” பாசுரமும் இதனை விளக்குவதாம் .., ஸ்ரீவித்யை
தத்துவத்திலும் முக்கோண்ப பீட்த்திற்குப் பெருஞ்சிறப்பு உண்டு..., இந்த முக்கோணப்
பீட சக்தி கொண்ட்து ஃ எழுத்தாகும்..
ஃஎழுத்தின் மத்தியில் உள்ள சூட்சுமப் பரவெளி...., கடுவெளி .., இதனுள் ஆதிமுதலில்
சர்வேஸ்வரன் ,முதன் முதலில் சித்தர்களைத் தோற்றுவித்தார் . சித்சக்தி வாய்ந்த
ஸ்வஸ்திக் சக்கரமும் முக்கல் எனப்படும் ஃஎழுத்தின் ஆக்கப் பூர்வ இயக்கமே..!!!
§
எப்போதும் தவத்தில் திளைக்கும் அட்சரமாய் ஃ எழுத்தினைக் கீழ்க்கண்டவாறு
அகஸ்தியர் சிறப்பித்துப் போற்றுகின்றார்...!!!
கண்டுரைத்த ‘காரணத்தான் எழுத்தாய் அப்பா
பண்டொரு நாள் ஃ என்னும் முக்கண் தானே
அண்ணாமலைத் தோன்றல் முக்கல் யாகம்
கண்ணாயிர சக்திசிவ சீவனுந்தானே
விண்டவரோ கண்டவரோ பிரணவம் என்பார்
பண் ஆயிரங் கண்ட ஃகைப் பாராய்
செண்டாலே சேல்முருகன் சேவுகனாகி
வண் தவத்தே பூச்சியமாய் ஆகுது பாரேன்
§ இப்பிரணவ பிராண சக்திப் பாசுரத்தை தினமும் ஓதுதல் , ஃஅடசரத்தின் பிரணவப் பிராண
சக்திகளை வார்க்கும்...மேலும் (பொதிய) மலை போல் விளக்கங்களுக்கு ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழை காண்க.....
மார்ச் 2014
No comments:
Post a Comment