எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, November 15, 2016

நவதன்மயப் பிரகாசிகள்...

  ••• கருடக்கொடி சித்தர் , பதஞ்சலி மஹரிஷி ,புருஷாமிருக மாமுனிவர் , கல்யாண தரங்ககிணி , மங்கள தரங்கிணி , காமதேனு கோமாதா , வியாக்ரமாத மஹரிஷி , சுகபிரம்ம மஹரிஷி ஆகிய நவதன்மயப் பிரகாசிகள்...  

••• ஏற்று நடத்தும் நடப்பு துனமுகி ஆண்டு அருணாசல கார்த்திகை தீபோற்சவம்.,அருணாசல மஹார்கார்த்திகை அமிர்த ஃபலஸ்தான தீபத்திருநாள் : 12.12.2016

••• ஃபலஸ்தான காலத்தில் மாயை அற்றதும் , எவ்வித தோஷமும் இல்லாததுமான பங்கஜ ஒளிவெணியில் தான் , மேற்கண்ட அமிர்த சக்தி உருவாகும் வைபவம் கனிந்து நிகழ்கின்றது .., ஒவ்வொரு திதிக்குமான ஒளிப்பிரகாசத்தை , நித்ய சந்திர (ஒளி)கதி புகட்டும்..,

••• இதன்படியாய் எண் பதிமுன்றை (13) , பிரதோஷம் போல் , தோஷம் இல்லாத “பிரிசுத்த பவித்ர பரிணாமி என 13 எழுத்துக்களால் போற்றி , வருணபகவானின் ஆசியுடன் அஷ்டாவக்ர ரிஷி அற்புத துதிகளை யாத்துள்ளார்...,!!!


••• மாயைக்கு ஆளாகாதோர் உலகில் இல்லை .. ஆனால் சுகபிரம்ம ரிஷி பூமியில் தோன்றுவதற்காய் ., ஈஸ்வரனே மாயையை 60 நொடிகளுக்கு .. உலகில் சற்றே நிறுத்தி வைத்தார் என்றால் என்னே இவருடைய காலங்கடந்த யோகசுதம்!!

••• ஈஸ்வரனாரே மாயையை விலக்திக் தோற்றுவித்த பரிசுத்தமான இந்தக் காலாமிர்த நேரத்துக்கு :அமிர்த ஃபலஸ்தானம் என்று பெயர்!!!

•••  எம்மஹரிஷியை வணங்கினாலும் அது சுகப்பிரம்ம ரிஷியை சென்றடையும்


••• இவ்வரிய நவதன்மயப் பிரகாசிகள் பற்றிய விளக்கங்களை..., ஈண்டு கண்டு அவர்களை தரிசிக்கும் பெரும் பேறு பெற்றிட.. ஸ்ரீஅகஸ்திய விஜயம் தீபோற்சவ இதழை காண்க : store addresses @ www.agasthiar.org/store.htm  

No comments:

Post a Comment