எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, August 14, 2018

நட்சத்திரகிரி

                                                  *பூமிக்கு அடியில் சித்ரா பௌர்ணமி*
காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே ஏழு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, ‘ஐயங்கார் குளம்’ எனும் திருத்தலம். இங்குள்ள சஞ்சீவிராயர் சுவாமி கோயிலையொட்டி உள்ள பெரிய குளத்தின் அருகே நடவாவிக் கிணறு என்ற சிறப்பு வாய்ந்த கிணறு உள்ளது. இந்தக் கிணற்றுக்குள் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகள் வழியாகக் கீழே சென்றால் கருங்கல்லால் ஆன, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபத்தைக் காணலாம். இது ஓர் அபூர்வ கட்டிட அமைப்பு என்று ஆய்வாளர்கள் கூறுவர். எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படும் இந்தப் பெரிய கிணற்றில் ‘சித்ரா பௌர்ணமி அன்று ஒருநாள் மட்டும் உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றிவிடுவார்கள். அன்று மாலை பூமிக்கு அடியில் (கிணறு) அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமானை எழுந்தருளப் பண்ணுவார்கள். மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். இரண்டு நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சுவாமிகளைத் தரிசிக்கலாம். அதன்பின் கிணற்றில் நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும். இந்த அபூர்வ காட்சியைத் சுற்றுவட்டாரத்து மக்கள் வந்து தரிசித்து பெருமாளின் திருவருளைப் பெறுகின்றனர்.

பொதுவாக சனிபகவானை, விக்கிரக வடிவத்தில் நாம் பல கோயில்களில் தரிசித்திருப்போம். ஆனால், யந்திர வடிவத்தில் சனீஸ்வர பகவான் அருள்புரியும் கோயில் வேலூர் மாவட்டம் ஆரணியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலிருக்கும் ஏரிக்குப்பம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது.

பூமிக்கடியில் கட்டபட்ட கோயில்..ஆண்டு முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருக்கும் அதிசயம்! :
காஞ்சி-அய்யங்கார்குளம் ஆஞ்சநேயர் கோயில் வியப்பின் சரித்திர குறியீடு!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அய்யங்கார்குளம் என்ற ஊரில் தான் இந்த அதிசயம்.
இந்த ஊரிலிருக்கும் பிரபலமான, கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமையான ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலுக்கு முன்னால் இருக்கும் குளக்கரையின் வடக்குப் பகுதியில் வாவிக் கிணறு ஒன்று உள்ளது.
மிக அற்புதமான கலை அம்சம் நிறைந்த வேலைப்பாடுகளுடன் கூடிய பெருமாள் கோயில் பூமிக்கடியில் உருவாக்கப் பட்டு, அதற்குள் அழகிய மண்டபமும், அதன் நடுவே கிணறு ஒன்றும் உள்ளது. இந்தக் கிணற்றில் உள்ள ஊற்று வருடம் முழுவதும் பெருக்கெடுத்து வருகிறது. அதனால் இந்தக் கோயில் எப்போதும் தண்ணீராலேயே நிரம்பிக் காணப் படுகிறது.
சித்ரா பௌர்ணமித் திருவிழாவிற்காக இந்த தண்ணீரை மோட்டார் இயந்திரம் மூலம் வெளியேற்றி விடுவார்கள். விழா நாளில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் உற்சவராக வருவார். அவர் பல்லக்கில் வந்து இந்த வாவிக் கிணற்றுக்குள் இருக்கும் மண்டபத்திற்குள் எழுந்தருள்கிறார்.
லட்சக் கணக்கான மக்கள் இந்த அதிசயக் கிணற்றுக் கோயிலின் திருவிழாவிற்காக வருகிறார்கள். விழா முடிந்து ஒரு வாரம் கழித்து மீண்டும் தண்ணீர் நிரம்பத் துவங்கி விடும். இந்த நீரை முறையாகப் பாசனத்திற்கு ஏற்றம் மூலம் இறைத்துப் பயன் படுத்துகிறார்கள்.
இன்னொரு அதிசயமும் இந்தக் கோயிலுக்கு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலில் இருந்த உற்சவர் ஐம்பொன்னால் செய்யப் பட்ட ஆஞ்சநேயர் சிலை திருடு போய் விட்டது. ஊர் மக்கள் போலிசில் புகார் கொடுத்துள்ளனர். சிலையை எடுத்துச் சென்ற திருடர்களால் அந்த சிலையை வெகு தூரம் கொண்டு செல்ல இயலவில்லை.
எனவே ஒரு குளத்தில் அந்த சிலையைப் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் இந்த சிலை கண்டெடுக்கப் பட்டு மீண்டும் இந்தக் கோயிலுக்கே வழங்கப் பட்டது. இது இங்குள்ள ஆஞ்சநேயரின் மகிமையாக இந்த ஊர் மக்கள் கருதுகிறார்கள்.மேலும் கருவரையைச் சுற்றி வரும் போது, தவழ்ந்து தான் செல்ல முடியும். அதற்காகவே குறுகலாகப் பாதையை அமைத்துள்ளார்கள்.

சுயம்பு முருகனை காண்பது அரிது. அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம்.
வில்வாரணி நட்சத்திரகிரியில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தனிச்சிறப்பு பெற்றது. முருகப்பெருமானின் கருணையால் உருவான இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சிதரும் சிறப்பு இங்கு மட்டுமே காண இயலும்.27 நட்சத்திரங்களும், சிவ சர்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு, இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை. வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப்பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க கோயில் எனும் பெருமையும் இத்திருதலத்துக்கு உண்டு.
27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோயில் அமைந்திருக்கிறது. எனவேதான், நட்சத்திர கோயில் எனும் சிறப்புடன் பக்தர்கள் அழைக்கின்றனர். இக்கோயில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. காஞ்சிபுராணம், அருணாச்சல புராணம் வாயிலாக அறியும் இக்கோயில் தொடர்பான ஆன்மிக வரலாறு மிகவும் சுவையானது. வேல் விளையாட்டில் வல்லவனாம் வேலவன், வாழைப்பந்தலில் இருந்து எய்த அம்பு, பருவதமலை மீது பாய்ந்தது. அப்போது அங்கு தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன. அதனால் பெருக்கெடுத்த உதிரம் ஆறாக பெருக்கெடு த்து மலையில் இருந்து வழிந்தோடியது. உதிரம் பெருக்கெடுத்து ஆறாக பாய்ந்ததால் இன்றைய செய்யாற்றுக்கு சிவப்பு நதி, செய்நதி எனும் பெயரும் உண்டு.சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்ம கத்திதோஷம் பிடித்தது. எனவே செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் பூஜித்தால் முருகப்பெருமானுக்கு தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி உபதேசித்தார்.
அதேபோல் முருகப்பெருமான், செய்நதியின் வலதுகரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், குருவிமலை, பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடதுகரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு, ஓரந்தவாடி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, மோட்டுப்பாளையம், பழங்கோயில், மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இன்றளவும் இந்த 14 இடங்களிலும் முருகன் வழிபட்ட சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.
முருகப்பெருமான் வழிபட்ட இந்த 14 சிவாலயங்களை யும் இரண்டு சிவாச்சாரியார்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்விருவரும் ஆடிக்கிருத்திகை நாளில் திருத்தணி சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். ஒரு வருடம் ஆடிக்கிருத்திகைக்கு திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. அதனால், மனம் வருந்தினர். இருவரின் கனவிலும் தோன்றிய முருகன், திருத்தணிக்கு செல்லவில்லை என வருந்தவேண்டாம், நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாக சிவசுப்ரமணிய ஐக்கியத்தில் குடியிருக்கிறேன். சூரியன், சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கின்றன.
எனவே, நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட என்னை வந்து சேருங்கள் என இருவர் கனவிலும் முருகர் அருள்புரிந்தார். திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு, நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்கு சென்றனர். அப்போது, சப்பாத்திகள்ளி புதரில் சுயம்பு வடிவாக முருகப்பெருமான் காட்சியளித்தார்.முருகனே அருள்காட்சியளித்த நட்சத்திரகிரி கோயிலில், சித்திரை பிறப்பு பால்குட அபிஷேகம், ஆடிக்கிருத்திகை பெருவிழா, கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், தைக்கிருத்திகை, பங்குனி உத்திர பிரம்மோற்சவம், மாதாந்திர கிருத்திகை விஷேசமானவை.
கிருத்திகைதோறும் நட்சத்திரகிரியை வலம் வருவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.இவ்வாலயத்தில் கிருத்திகைகளில் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்க ளின் நாகதோஷம் புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும்; புதுவாழ்வு பிறக்கும்.பாலபிஷேகம் செய்து, சிவந்த விருட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகும்; நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை! .ஆலய அமைவிடம் : திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில்
பிரம்மன் உள்பட அனைவரின் சோகம் தீர்க்கும் வந்தவாசி-சோகத்தூர் ஸ்ரீ யோக நரசிம்மர் தரிசணம் இனிதே நிறைந்தது. ஓம் திவ்ய நரசிம்மாய நம:
இஞ்சிமேடு ஸ்ரீபெருந்தேவி ஸமேத ஸ்ரீவரதாஜப் பெருமாள்(ஸ்ரீ கல்யாண நரசிம்மர்)

திருமுக்கூடலூர் அஞ்சநாச்சியம்மன் சமேத அகத்தீசுவரர் திருக்கோயில்! (1500 ஆண்டுகள் பழமையான சிதலமாடைந்த திருத்தலம்) கரூர் மாவட்டம், நெரூர் பிரமேந்திரர் திருக்கோயில் அருகில் இச்சிவாலயம் அமைந்துள்ளது.காவிரி, அமராவதி, மணிமுத்தாறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமராவதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது.
காசியிலிருந்து வாலி காசிலிங்கத்தினை பிரதிஸ்டை செய்ய இத்தலத்திற்கு வந்தார். ஆனால் அதற்கு முன்பே அகத்தியர் இத்தலத்தில் மணலால் ஆன இலிங்கத்தினை பிரதிஸ்டை செய்து வழிபட்டுவிட்டார். தான் காசிக்கு சென்று எடுத்துவந்த காசிலிங்கத்தையே இங்கு பிரதிஸ்டை செய்ய வேண்டுமென வாலி அகத்தியருடன் சண்டைக்கு சென்றார். அகத்தியர் இந்த மணல் சிற்பத்தை வாலால் அசைத்துப் பார்த்து, முடிந்தால் இந்த லிங்கத்தை எடுத்துவிட்டு நீ கொண்டு வந்த இலிங்கத்தை வைத்து வழிபடு என்றார். வாலியும் தன்னுடைய முழு பலத்தை பிரயோகம் செய்து அசைத்துப் பார்த்தார். ஆனால் வாலால் இலிங்கத்தை அசைக்க முடியவில்லை. அதனால் காசிலிங்கத்தினை காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சிறீராமசமூத்திரம் என்கிற அயலூரில் பிரதிஸ்டை செய்தார். அத்தலம் அயலூர் வாலீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
அடியார்கள் வருகை குறைவு, கண்டுகொள்ளாத அறநிலை துறை போன்ற பல காரணங்களால், ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது.கரூர், நெரூர் செல்லும் அடியார்கள், பக்தர்கள், அருகில் உள்ள திருமுக்கூடலூர் சென்று இறைவனை வேண்டி, விண்ணப்பம் வையுங்கள். விரைவில் குடமுழுக்கு காண வேண்டும்! நன்றி!
தொடர்புக்கு - திரு. ராமநாதன் குருக்கள் அவர்கள் - 9047451614 & 9585740036.
Thirumukudlur, Tamil Nadu 639114

விழுப்புரத்தில் இருந்து விக்கிரவாண்டி, பேரணி, மைலம் என சுமார் 62.5 கிலோ மீட்டர் பயணம் செய்தால் கிளியனூர் அடுத்து அமைந்துள்ளது அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில். விழுப்புரம், மைலம் இருந்து வானூர் வழியாக 51 கிலோ மீட்டர் பயணித்தாலும் இக்கோவிலை அடையலாம். மேலும், பாண்டிச்சேரியில் இருந்து 12.5 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. பாண்டிச்சேரியில் இருந்து சென்னை - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், டோல்கேட்டைக் கடந்து திண்டிவணம் நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டும்.

Read more at: https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-panchamuga-anjaneya-temple-near-villupuram/articlecontent-pf23969-002312.html


தளிஞ்சி என்ற ஊரில் அகஸ்தீஸ்வரர் ஆலயம் புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாலூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது தளிஞ்சி என்ற ஊர். இங்கு அகஸ்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் பெயர் அகஸ்தீஸ்வரர், இறைவி பெயர் அகிலாண்டேஸ்வரி அம்மன்.  

No comments:

Post a Comment