எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, August 14, 2018

நாகசம்ரட்சண கோமுகி



நாகசம்ரட்சண கோமுகி 🌀 நாக சதுர்த்தி /நாக பஞ்சமி 8⃣🌀     _- வாத்தியார் அருளுரைகளில் சில

🐍நாகசம்ரட்சண கோமுகி என்ற ஒரு விசேஷமான கோமு()கி வழிபாடு உண்டு. 🐍கோமுக பூஜையில், கோமுகத்தின் வழியே இறைவனுக்கு அபிஷேகமான அனைத்துத் திரவியங்களும் பிரசாதமாக வருவதால், தினமும் மூலத்தானத்திலிருந்து வெளி வரும் (கோமுகம்) அபிஷேக நீரைப் பிரசாதமாக அருந்தி வருவோர்க்கு நல்ஆயுள் விருத்தியாகும். பல்வகை நோய்களும் வாராது தற்காத்தும் தரும். 🐍சில கோமுகங்களின் மேலோ, கீழோ நாக தேவமூர்த்திகள் இருப்பதுண்டு. அவைகளுக்கு நாக சம்ரட்சகக் கோமுகி என்று பெயர்.

🐍சென்னை அருகே உத்திரமேரூர் பெருமாள் ஆலயத்தில், கோஷ்ட மூர்த்தியாக உள்ள நாகசம்ரட்சண மூர்த்தி, நோய்களை, குறிப்பாக சர்க்கரை வகை நோய்களைத் தீர்க்க வல்ல மூர்த்தி. 🐍இத்தலத்தில் நாகமூர்த்திக்குத் தேன் கலந்த இனிப்புகளைப் படைத்து வழிபடுதல் விசேஷமானது.

🌀 நாக சதுர்த்தி /நாக பஞ்சமி 9⃣🌀  _- வாத்தியார் அருளுரைகளில் சில

🐍சம்வத்ர நாகம், சம்ஸ்தித நாகம், சம்ரட்சக நாகம் போன்ற மூல நாக மூர்த்திகள் மிருகநட்சத்திர நாளில் பூவுலகிற்கு வந்து நாக தோஷங்களை நிவர்த்திப்பதற்கான அருட் சக்திகளைப் பொழியும் தலங்களில் திருநாகேஸ்வரம், கீழ்ப் பெரும் பள்ளம், பேரையூர், நாகர்கோயில், நயினார் கோயில், நாகப்பட்டினம், நாகாத்தம்மன் சன்னதிகள் போன்றவையும் உண்டு

🐍 நாக சக்தி தலங்களில், (குறிப்பாக மிருகசீரிடம் நட்சத்திர நாட்களில் மாலை ராகு காலத்தில்) தேனபிஷேகம், தேனில் ஊறிய நெல்லிக் காய்களைத் தானமாக அளித்தல் நாக தோஷ நிவர்த்திக்கு உதவும்.

🌀 நாக சதுர்த்தி /நாக பஞ்சமி 🔟🌀   _- வாத்தியார் அருளுரைகளில் சில

🐍 நாகர்கோயில், நாகப்பட்டினம், நாகையூர், பாம்புரபுரம் போன்ற நாகப் பெயர் உள்ள தல ஆலயங்களிலும், 🐍 அய்யர்மலையில் கிரிவலப் பாதையில் வரும் அபூர்வமான பாம்புப் புற்றையும் வழிபடுதல் மிகவும் விசேஷமானது.

🐍திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில், ஸ்ரீ ஜோதி விநாயகர் ஆலயம் முன் வரும், காமக்காடுக்கு எதிரே வரும் உள்ளடங்கிய பெரிய குடநாகப் புற்று தரிசனமே மிகவும் விசேஷமானது 🐍நாக தோஷங்களுக்கு நாறிப்பூ நாக தோஷம் என்று பெயர். இவற்றைச் செவலூர் பர்வதூஜாப நாக பூஜையாலும்,

🐍 துடையூர் நாகப் புற்று வழிபாட்டாலும் மற்றும் சமஷ்டி நாக மூர்த்தித் தலங்களிலும் தான் தான் தீர்க்க முடியும்.

🐍சமஷ்டி நாக மூர்த்தித் தலமெனில், "நூற்றெட்டுக்கும் மேற்பட்ட நாக மூர்த்திகள்" சேர்ந்து இருப்பதாகும். -

🐍 காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர்,

🐍 புதுக்கோட்டை -பொன்னமராவதி இடையே உள்ள பேரையூர் போன்ற - நூற்றுக்கும் மேற்பட்ட நாகக் கல் பிம்பங்கள் உள்ள சமஷ்டி நாக மூர்த்தித் தலங்களில் நாக வழிபாடு ஆற்றுதல், தீராத பல வகை நாக தோஷங்கள் நிவர்த்தியாக உதவி, திருமணம் கை கூட வழி பிறக்கும்.

🐍புதுக்கோட்டை பொன்னமராவதி இடையே உள்ள செவலூர் ஸ்ரீபூமீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அபூர்வமான நாகதேவதா மூர்த்திக்கு, பர்வதூஜாப நாகம் என்ற பெயர். 🐍இவற்றின் தரிசனங்களே மிகவும் விசேஷமானவை.
🐍பொதுவாக இவற்றைத் தொட்டு, அலங்கார, அபிஷேக, ஆராதனைகள் செய்யாது, இவ்வடிவிற்கு முன் நாகக் கோலம், சூரிய, சந்திரக் கோலங்களை வரைந்து, கோலங்களின் நடுவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, மூன்று தேங்காய்களை வைத்து, தேங்காய்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதால், தீர்க்க முடியாத பல நாக தோஷங்களைப் போக்க வல்லதாகும்.

அய்யர்மலை சிந்தூர நாகப்புற்று

🌀 நாக சதுர்த்தி /நாக பஞ்சமி 1⃣1⃣🌀_- வாத்தியார் அருளுரைகளில் சில

🐍ஆயிரம் வருடங்கள் எவரையும் தீண்டாது விஷத்தை அடக்கும் நாகங்களில் அதனதன் விஷமே அற்புத நவரத்ன மணியாகும் அனுபூதி அய்யர்மலை நாகப்புற்றின் பூமியடி அடித்தளத்தில் நிகழ்ந்து  🐍அய்யர்மலை ஆண்டவராம் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரரைச் சென்றடையும்🐍அஷ்ட நாகங்களும் பஞ்சமி தினத்தில் வலம் வந்து வணங்கும் புண்ணிய பூமி 🐍இங்கு பெளர்ணமி தின கிரிவலம் வருதல் நாகதோஷ நிவர்த்திக்கு எளிமையாக வழிவகுக்கும்

சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீ மாசில்லாமணீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் நாகவீதம் கொண்ட விசேஷமான காலபைரவ மூர்த்தி!

🌀 நாக சதுர்த்தி /நாக பஞ்சமி 1⃣2⃣🌀       _- வாத்தியார் அருளுரைகளில் சில
🐍இவ்வாலயத்தில் ஸ்ரீகாலபைரவரும் விசேஷமானவரே!
🐍இதன் ரகசியத்தை நேரில் தரிசித்து உய்வடைவீர்களாக!
🐍நாக பஞ்சமி, நாக சதுர்த்தி, கருட பஞ்சமி போன்ற நோன்பினை முறையாகச் செய்யாதோர்
🐍மற்றும் நாக தோஷங்களை உடையோர், 🐍நாகராஜன், நாகரத்தினம், நாகலெட்சுமி போன்றநாகநாமம் உடையோர்
🐍இங்கு ஸ்ரீ காலபைரவருக்குப் பசும்பால் அபிஷேகம் செய்து பால்-இனிப்புகளை ஏழைக் குழந்தைகளுக்கு அளித்துவர நாக தோஷ நிவர்த்தியும் மிருத்யு தோஷம் பரிஹாரமும் கிட்டும். 🐍தனிச் சந்நதி கொண்டு அருள்பாலிக்கும் நாகவீதம் கொண்ட விசேஷமான காலபைரவ மூர்த்தி!

Specific nakshathira naga names specified in ayur devi book..., அந்தந்த நட்சத்திரத்திற்க்கான நாகப் பெயர் வழிபடும் முறைகளை ஆயுர் தேவி புத்தகத்தில் காண்க..




தற்காலத்தில் பல கட்டிடங்களும் வாஸ்து சாஸ்திர இலக்கணமான 90 டிகிரி கோண இணைப்பைப் பெறாததால் அக்கட்டிடத்தில் ஒலி, ஒளிப் பரிமாணங்களில் பலவித குழப்பங்கள் ஏற்படுகின்றன. கண்டீர நாக தேவதையின் நாக்கானது 90 டிகிரி கோண அளவைக் கொண்டுள்ளது. மேலும், அதனுடைய உடம்பில் ஆறு பக்கங்களுடன் கூடிய அறுகோண பதக்கங்களும் சமக் கோண அளவில் அமைந்துள்ளன. இந்தக் கோண சூட்சும இலக்கணங்கள் எத்தகைய கடுமையான சகஜ வாஸ்து குறைபாடுகளையும் நீக்கும் வல்லமை உடையதால் சிறுகமணி திருத்தலம் அற்புத வாஸ்துத் தலமாகவும் சித்தர்களால் போற்றப்படுகிறது. இத்தலத்தின் ஈசான்ய திசையில் அமைந்துள்ள பாம்புப் புற்றில் கண்டீர சௌம்யம் என்ற நாக தேவதை வசித்து வருகிறது. இந்தத் தேவதையின் தரிசனம் பெற்றவரே இத்தலத்தில் சூட்சுமமாக பவனி வரும் கமணீய கலாநிதி ஆவார். அஸ்தீக சித்தரின் அருள் பெற்ற கண்டீர சௌம்யம் நாக தேவதையே இத்தகைய சகஜ வாஸ்து சக்திகளை நிரவச் செய்யும் அற்புத அனுகிரக சக்திகளை உடையது. more @ kulaluravuthiagi.org else check in book கமணீய பிரண மகிமை (1,2) சிறுகமணி திருத்தல மகிமை



கிருஷ்ணார்ப்பணம்

No comments:

Post a Comment