எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, August 14, 2018

நாக சதுர்த்தி


                      திருச்சி நாகநாத சுவாமி கோவில் 
🌀 நாக சதுர்த்தி /நாக பஞ்சமி 3⃣🌀_- வாத்தியார் அருளுரைகளில் சில

🐍நாக தேவதைகள் வசிக்கும் திருத்தலங்களில் திருச்சி நாகநாத சுவாமி சிவாலயமும் ஒன்றாகும். 🐍இங்கு பிரகார மண்டபத்தில் உள்ள தூண்களில் விதவிதமான நாக வடிவங்களைக் காணலாம். 🐍நாக தோஷம் தீர வேண்டி, இத்திருக்கோயிலின் ஒவ்வொரு தூணையும் சுத்தப்படுத்தி மஞ்சள் தடவி குங்குமமிட்டு, தூணின் கீழ் நாககோலம் அல்லது ஏதேனும் தெரிந்த கோலமிட்டுப் பசுநெய் தீபமேற்றி வழிபடுதல் வேண்டும்.

🐍இன்றைக்கும் பல நாகதேவதைகள் சதுர்த்தசி திதியன்று மலைக்கோட்டையைச் சுற்றி சூட்சும, ஸ்தூல ரூபங்களில் கிரிவலம் வருகின்றன. 🐍அனைத்தையும் ஆற்ற வல்ல நாக தேவதைகளே இறைவனின் திருவடியை நாடி மலைக்கோட்டையைக் கிரிவலம் வருகின்றனவெனில்  மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம்?

🐍 ஸ்ரீ சாரமா முனிவரின் சற்குருவே ஸ்ரீசசபிந்து சித்த மஹரிஷி!

             🐍ஸ்ரீஅஸ்தீக சித்தரின் வழித் தோன்றல்!
🐍ஸ்ரீசசபிந்து மஹரிஷியே நாக ரூபத்தில் தினமும் ஸ்ரீநாகநாத சுவாமிக்கு நித்ய பூஜை செய்கின்றார். 🐍இக்கோயிலில் உறையும் அனைத்து நாக தேவதா மூர்த்திகளுக்கும் இவரே அதிபதியாவார். 🐍இக்கோயிலுக்கும் நாக லோகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. 🐍இத்திருத்தலத் திருக்குளத்தின் மூலம் நாக லோகத்திற்கான வழிகள் உண்டு.

🐍சூட்சும ரூபத்தில் நாக லோகம் செல்வோர் கூட ஸ்ரீசசபிந்து மஹரிஷியைத் தொழுது இக்கோயில் மூலமாகவே நாகலோகத்தை அடையமுடியும். 🐍ஸ்ரீநாகநாத சுவாமிக்கு எதிரில், மண்டபத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு வலப்புறம், கொடிக்கம்பம் அருகில் உள்ள முதல் தூணின் கீழ்ப்புறம் ஸ்ரீசசபிந்து சித்த மஹரிஷி காட்சியளிக்கின்றார். 🐍நாக தோஷங்களுக்கு நிவாரணம் அளிக்கும் சித்தபுருஷரே ஸ்ரீசசபிந்து மஹரிஷி ஆவார்.

🐍நாக சதுர்த்தி/நாக பஞ்சமியன்று ஸ்ரீசசபிந்து மகரிஷிக்கு எண்ணெய்க் காப்பிட்டு, அபிஷேகம் செய்து பருத்திப் பஞ்சில் மஞ்சள் தடவி, மாலையாகத் திரித்து இந்தப் பஞ்சபூத சக்தி மாலையைச் சாற்றி வழிபட்டு ஏழைகளுக்குப் பால்பாயசம் அளித்திட எவ்வித நாகதோஷங்களுக்கும் இது சிறந்த பரிகாரமாக அமைகின்றது.

ஸ்ரீ தம்பிக்கலையான் சித்த சுவாமியை நம்பி அவர் பெயர் சொல்லி இருட்டில் நடந்தால் பாம்புகள் துன்பம் தராது

🌀 நாக சதுர்த்தி /நாக பஞ்சமி 4   _- வாத்தியார் அருளுரைகளில் சில

🐍ஸ்ரீ தம்பிக்கலையான் சித்த சுவாமி சென்னை திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள 108 சிவலிங்கங்களில் ஸ்ரீதுர்கைக்கு நேரில் இரண்டாவது லிங்கத்தில் ஐக்யமடைந்து இன்றைக்கும் அருள்பாலிக்கின்றார். 🐍கோமா நிலையில் உள்ளோர்க்காக இந்த லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பாதாம் பருப்பு கலந்த இனிப்பு /பாயசம் தானம் செய்திட குணமடையும். நல்வழி பிறக்கும்

வருடத்திற்கு ஒரு முறையே வரும் இந்த நாகசதுர்த்தி, பஞ்சமி திதி மிகவும் விசேஷமானதாகும்

🌀 நாக சதுர்த்தி /நாக பஞ்சமி 5⃣🌀      _- வாத்தியார் அருளுரைகளில் சில

🐍நாக சதுர்த்தி அல்லது நாக பஞ்சமி அன்று காலையில் சூரியோதய காலத்தில் நாகபுற்றுக்குப் பால் வார்த்து, பருத்திப் பஞ்சினில் மஞ்சள் தடவி இப்பஞ்சு மாலையை நாகப்புற்றிற்குச் சார்த்த வேண்டும்.

🐍இதனால் சகலவித நாக தோஷங்களும் நிவர்த்தி பெறும். 🐍பாம்பினால் கடிக்கப்படுவது, பாம்பு தன்மேல் விழுதல், பாம்பினை மிதித்தல், நாகப்பாம்பினை அடித்து வதைத்துத் துன்புறுத்தல் போன்றவற்றினால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தியாக இந்த நாக பஞ்சமி நாளில் சாத்தான் என்கிற நட்சத்திர தேவதையை வேண்டிஸ்ரீசாம தந்த நாக ஸ்வரூபாயை நம : “சாம தந்த நாகமே போற்றிஎன்று வணங்கி நாகப்புற்றிற்கு, குறிப்பாக வேப்ப மரத்தடியில் உள்ள புற்றிற்குப் பால் வார்த்தல் சிறப்பானதாகும்.

🐍இந்த உத்திர நட்சத்திரத்தில் எழுந்தருளும் நாகதேவதைக்குச் சாமதந்தன் என்று பெயர். 🐍இந்நாளில் நாகராஜன், நாகலட்சுமி, நாகப்பன் போன்ற நாகப் பெயர்களை உடையோர் கண்டிப்பாக நாகப் புற்றிற்குப் பால் வார்க்க வேண்டும்.

🐍இப்பெயரை உடைய ஏழைகளுக்குத் தேவையான உணவு, உடையினை வழங்குதலால் திருமணத் தடைக்கான நாக தோஷங்கள் தீரும்.
நாகத்திற்குரிய தலங்கள்

🌀 நாக சதுர்த்தி /நாக பஞ்சமி 6⃣🌀    _- வாத்தியார் அருளுரைகளில் சில

🐍பூலோகத்தில் குறித்த சிலதலங்களில் நாக தேவதைகள் வாசம் செய்து தினந்தோறும், அத்தலத்திற்குரிய தெய்வமூர்த்திக்கு வழிபாடு செய்து வருகின்றன.

🐍நாகர்கோவில், 🐍மருதமலை ஸ்ரீபாம்பாட்டி சித்தர் ஜீவசமாதி, 🐍திருச்சி ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயில், 🐍தேவகோட்டைதிருவாடானை அருகிலுள்ள ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயில்,  🐍திருநாகேஸ்வரம் இராகு தலம், 🐍கர்நாடகத்திலுள்ள சுப்பிரமண்யம் போன்ற இறைத் தலங்களிலுள்ள நாகப்புற்றினை வழிபடுவது அபரிமிதமான பலன்களைத் தரும்.🐍 இத்தலங்களில் நாகபஞ்சமியினைக் கொண்டாடுவதால் ஏற்படும் பலன்களை விண்டுரைக்க இயலாது.


🐍அற்புதமான தெய்வீக சக்தியைப் பெற்றுத் தருவதோடு நாக கன்னிகைகள், நாக தேவதைகளின் தரிசனத்தையும் பெற்றுத் தரும்.

சென்னை  - திரிசூலத்தில் நாகத்தையே பூணூலாகத் தரித்த  விநாயக   மூர்த்தி  அருள்கின்றார் 🌀 நாக சதுர்த்தி /நாக பஞ்சமி 7    _- வாத்தியார் அருளுரைகளில் சில

🐍நாகத்தைப்  பிடித்த  நிலையில்நாகாபரணம் அணிந்த நிலையில்நாகத்தைக் குடையாகக் கொண்ட  நிலையில்நாகத்தையே பூணூலாகத் தரித்த  நிலையில் அருளும் விநாயக மூர்த்திகள் யாவரும்  அமிர்த விநாயக மூர்த்திகளே!

🐍செவ்வாய்க்கிழமை  பிருத்வி சக்திகளைக்  கொண்டமையால், பூமியிடியில் வாழும் நாகங்களுக்கு செவ்வாய் சிறப்புடைய நாளாகின்றது

🐍செவ்வாயன்று வரும் அங்காரகச் சதுர்த்தியில் சில வகை நாகங்கள் நான்கு தலைகளுடன் பிள்ளையாரைப் பூஜிக்கின்றன. 🐍இதன் பலாபலன்கள் பிள்ளையார் சந்நதியின் கோமுக சக்திகளாக வெளிப்படும்.

🐍எனவே அங்காரக சதுர்த்தி அன்று விரதமிருந்து விநாயகர் சந்நதியில் அபிஷேகப் பூஜைகளை ஆற்றி, கோமுகத் தீர்த்தத்தை அருந்தி, விரத நிறைவு கொள்வது விசேஷமானது.

🐍மேலும் புற்று வகை மூர்த்திகளை வழிபடுதல் நாகேஸ்வர தரிசனப் பலன்களைத் தரும். 🐍இதனால் மனதில் எழுந்த, எழும் விஷத்தனமான எண்ணங்கள் மாறுபடத் தக்க  ஜபவழிமுறைகள்  தக்க பெரியோர்கள் மூலம் கிட்டும்

No comments:

Post a Comment