எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, August 30, 2018

விதி தேவதை

             ஓம் தத் புருஷாய வித்மஹே பீதாம்பரதரி சமேதாய தீமஹி
                                 தந்நோ சம்பூர்ணேஸ்வர ப்ரசோதயாத் 

என்ற சனீஸ்வர துதியை ஓதி குருவருளைப் பூர்ணமாகப் பெற அவர் பாதங்களில் சரணடைந்து செவ்வாழை, ஆப்பிள், செர்ரி போன்ற செந்நிற பழ வகைகளை தானம் அளித்தல் நலம். மதி மயக்கத்தால் குரு வார்த்தைகளை மீறாதிருக்க, விதி தேவதையான சனீஸ்வர பகவானின் அருளைப் பெற இந்த வழிபாடு பெரிதும் உதவும்.  more on kulaluravuthiagi.org / saneeswara mahimai book !


திருவக்கரை அருகே உள்ள திருமங்கலத்தில் சிதம்பரேஸ்வரராக காட்சியளிக்கிறார். நாயகியின் பெயர் சிவகாமசுந்தரி. சுமார் 2500 வருடங்கள் பழமையான படுக்கைக்கல் லிங்கம், நந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியவை மட்டுமே இங்குள்ள ஏரிக்கரையில் கிடைத்துள்ளன.மகாலட்சுமி, கெஜலட்சுமி ஆகியோரும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். அடுத்து மகாகணபதி சன்னதி, முருகன் சன்னதி உள்ளது. அவற்றின் அருகிலேயே வில்வம், நாகலிங்கம், மகாவில்வம் மற்றும் திருவோடு மரங்கள் உள்ளன. இக்கோயிலின் ஸ்தல விருட்சமாக கடம்ப மரம் உள்ளது. மகாவில்வ மரத்தில் ஒரு காம்பில் 11 இலைகள் உள்ளது சிறப்பானது. இதனைக்கொண்டு அபிஷேகம் செய்தால் பல வருட பலன்கள் ஒரே நேரத்தில் கிடைக்கும். வழக்கமாக கோயில்களில் நாகசிற்பம் மட்டுமே இடம் பெற்றிருக்கும். இக்கோயிலில் தனி சன்னதியாக அமைத்திருக்கிறார்கள். அடுத்து மூலவர் கருவறைக்கு வலதுபுறம் சனீஸ்வரர் தனி சன்னதியில் ஜேஸ்டா, மந்தா, நீலா ஆகிய 3 மனைவியர்களுடன் அருள்பாலிக்கிறார். கோபுரத்தின் தெற்கில் எமதர்மராஜனும், மேற்கில் விநாயகரும், வடக்கில் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறார்கள். எண்கோண வடிவில் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. சனியின் வாகனமான காகத்துடன், கழுகு வாகனமும் (வடநாட்டில் சனிபகவானுக்கு கழுகு வாகனம் உண்டு) உள்ளது. நடராஜர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.கோயிலை ஒட்டி பாபாவின் ஐம்பொன் சிலையுடன் கூடிய தியான மண்டபம் உள்ளது. எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் வாழ்ந்த பல சித்தர்கள் இக்கோயிலில் வழிபாடு செய்துள்ளனர்.

And also ஞாயிறு தோறும் சூரிய பூஜை நிகழும் மணக்குடி சிவகாமி சமேத சிற்றம்பல நாடியார் சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் கீழிருப்பு, மயிலாடுதுறை. 4kms from mayiladuthurai bustand.

 


(திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் திருவடிகளே சரணம் .)


வழுவூர் : சனிபகவான் தனிச்சந்தியில் கையில் வில்லோடு காட்சி தந்து தன்னை நாடி வருவோர்க்கு வேண்டிய வரங்களை அளித்து அவர்களை காத்து வருகிறார். 

திருநள்ளாறு:- “பச்சைப்பதிகம்” பெற்ற புண்ணிய ஸ்தலமான “திருநள்ளார்” சென்று “நள தீர்த்தத்தில்” நள் எண்ணெய் தேய்த்து நீராடி பின் அங்கு உள்ள சனி பகவான் சந்நிதியில் எள் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வர நலம். இங்கு சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாவார். இங்கு வந்து வழிபடுபவர்களுக்கெல்லாம் அவர் அனுக்கிரகம் பண்ணுகிறார். 

திருநாரையூர்

நாச்சியார் கோவில் அருகே திருநாரையூர் என்ற ஊரில் தசரத மஹாராஜவுக்கு குடும்ப சகிதமாக மேற்கு நோக்கி தன் இரு மனைவிகளுடன் சனிபகவான் காட்சியளிக்கிறார். இங்கே சனிபகவான் தன்னுடைய வலதுபக்கம் ஜேஷ்டாதேவி என்ற நீலாதேவியுடனும் இடப்பக்கத்தில் மந்தா தேவியுடனும் மந்தா தேவிக்கும் சனிக்கும் பிறந்த தன் இரு குழந்தைகளில் குளிகன் மாந்தியுடன் காட்சியளிக்கிறார். இத்தலத்திற்கு வாய்ப்பிருந்தால் குடும்ப சகிதமாகச் சென்று சனி பகவானுக்கு எள் விளக்கேற்றி அபிஷேக அர்ச்சனை செய்து வர நன்மைகள் ஏற்படும். 



திருக்கொள்ளிக்காடு

இத்தலம் திருவாருக்கு அருகில் திருத்துறைப் பூண்டியில் விக்ரபாண்டியம் என்ற கிரமாத்தில் உள்ளது. இங்கு சனிபகவான் “பொங்கு சனியாக” காட்சி தருகிறார். இது “அக்னி தலம்” ஆகும். அதனால் தான் இத்தலத்திற்கு “திருக்கொள்ளிக்காடு” என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள சிவனுக்கு “அக்னீஸ்வரர்” என்றும் அம்பாளுக்கு மிருதுபாதநாயகி என்றும் பெயர். சனியானவர் தான் வழங்கும் நல்ல பலன்களை தேவர்கள் முதல் மனிதர்கள் வரை எண்ணிப் பார்க்காமல் தான் வழங்கும் தீய பலன்களை மட்டுமே நினைத்து பயப்படுவதால் மிகவும் மனம் வருந்தி விசிஷ்டரின் யோசனைப்படி அக்னி வனம் எனப்படும் இத்தலத்தில் வந்து கடும் தவம் செய்யலானார். இவரது கடுமையான தவத்திற்கு மனமிறங்கிய சிவபெருமான் அக்னி உருவில் வந்து தரிசனம் தந்து சனியை “பொங்கு சனியாக” மாற்றினார். அத்துடன் இத்தலம் வந்து தன்னையும் பொங்கு சனியையும் வழிபடுவோர்க்கு சனி சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும் எனவும் அருள்புரிந்தார். சிவன் அருள்படி சனிபகவான் இத்தலத்தில் குபேர மூலையில் இருந்து தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்புரிந்து மகிழ்ச்சியான வாழ்க்கையையும செல்வங்களையும் வாரி வழங்கி வருகிறார். 


தேசம் - சவுராஷ்டிரம் , கோத்ரம் - காசியப்ப கோத்ரம் , இனம் - சூத்திரன் 
          சமஸ்கிருதப் பெயர் - சனிச்ராயா, சாயாசுனா சௌரி

தந்தை - சூரியன் , தாய் - சாயாதேவி , குரு - சிவன்

சகோதரி - யமுனா தேவி
மனைவி - மந்தாதேவி, ஜேஷ்ட்டை என்ற நீலாதேவி
புதல்வர்கள் - மாந்தி, குளிகன்
தேவதை - யமன்
அதி தேவதை - பிரஜாபதி, சாஸ்த்தா ஐயனார்
பாலினம் - திருநங்கை
உருவம் - குள்ளம்
ருது - சிசு ருது
திசை - மேற்கு
ஆசன வடிவம் - வில்
கொடி - காகம்
நிறம் - கருப்பு 
குணம் - தாமஸம்
வாகனம் - கழுகு, காக்கை, எருமை
மலர் - கருங்குவலை
மரம் - வன்னி
உலோகம் - இரும்பு
இரத்தனம் - நீலக்கல்
நாடி - வாதம்
சுவை - கசப்பு
பஞ்சபூத தத்துவம் - ஆகாயம்
உடல் உறுப்பு - தொடை, கால்கள்
தசா ஆண்டு - 19 ஆண்டுகள்
சனி நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்தரட்டாதி
பூச நட்சத்திர அதிதேவதை - குரு என்ற பிரகஸ்பதி
அனுஷ நட்சத்திர அதிதேவதை - லஷ்மி
உத்தரட்டாதி நட்சத்திர அதிதேவதை - காமதேனு
சனியின் ஆட்சி வீடு - மகரம், கும்பம்
உச்ச வீடு - துலாம்
மூலத்திரி கோண வீடு - கும்பம்
நீச வீடு - மேஷம்
சனியின் பார்வை - 3, 7, 10
சனியின் நடப்பு கிரகங்கள் - புதன், சுக்ரன்
சமக் கிரகங்கள் - குரு, ராகு, கேது
பகைக் கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
அனுகூலமான கிழமை - சனி
அனுகூலமன திதி - அமாவாசை
ஆதிபத்ய வலிமை - இரவு நேரம்
பகல் ராசி - கும்பம்
இரவு ராசி - மகரம்
காரகன் - ஆயுள், தொழில், நோய்

சூரியனுக்கும் உஷா தேவிக்கும் முதலில் பிறந்த சிரார்த்த தேவன் வலுவான தவமியற்றி மன வந்தரத்துக்கு மனு ஆகும் பேறு பெற்றான். இரட்டையர்களாகப் பிறந்த யமனும் கடுமையான தவம் இயற்றி தென் திசைக்கு அதிபதியாக சத்தியத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பாமல் நடக்காமலும் பிதுர்க்களுக்கெல்லாம் தலைவனாகவும் ஆனார்.


யமனுடன் உடன் பிறந்த தங்கை யமுனையானவள் யமுனை நதியாக ஒடுகிறாள். சூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த மூத்த மகன் சருதச்வரஸ் மேருமலையில் கடும் தவம் இயற்றி ஸாவர்ணி மன்வந்தரத்துக்கு மனுவாகிப் போனார்.

“சருதகர்மா” என்பவரே சனிபகாவன் என்ற பெயரை அடைந்து காசிக்குச் சென்று அங்கு கோயில் ஒன்றை கட்டி அங்கு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து நெடுங்காலம் தவம் இயற்றி சிவன் சூரிய நாரயணர் வாயுதேவர் இவர்களின் அருள் பெற்று நவக்கிரங்களில் ஒருவராக ஆனார். சனிபகவான் எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருவார். மேல் இரு கைகளில் அம்பையும் வில்லையும், கீழ இரு கைகளில் வாளும் வரத அஸ்தமும் கொண்டு கழுகு வாகனத்தில் காக்கை கொடியில் ஸ்ரீ லெட்சுமி நரசிம்மரை உபாசிப்பவராக வலம் வருகிறார். A copied post from http://abiramiastrology.com


ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே. அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும். நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை . அதே தேதி .(Constant ). தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல.
சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள். இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி ஜோதிட ரீதியாக கடைபிடித்து வரும் விஷயம் அல்ல. ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம் :
சித்திரை-6, 15, (April 19, 28)
வைகாசி- 7, 16, 17, (May 21, 30, 31)
ஆனி- 1, 6, ( June 15, 20)
ஆடி-2, 10, 20, (July 18, 26, August 5)
ஆவணி-2, 9, 28, (August 18, 25, September -13.)
புரட்டாசி- 16, 29, (October-2, 15)
ஐப்பசி-6, 20, (October-23, November-6)
கார்த்திகை-1, 10, 17, (November-17,26, December-3)
மார்கழி-6, 9, 11, (December-21,24,26)
தை-1, 2, 3, 11, 17, (January 2018- 14,15,16,24, 30)
மாசி-15, 16, 17, (February 2018- 27, 28, March 2018-1)
பங்குனி-6, 15, 19. (March 2018- 20, 29, April 2018-2.)
இந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மாறவே மாறாது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வெள்ள பள்ளம் கிராமம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர். ஸ்ரீ காமாட்சி அம்மன் சிவாலயம் 8 பட்டையுடன் கூடிய சிவலிங்க திருமேனி அடைப்பாறு வடக்கிலும் மற்றும் அரிசந்திரா நதி தெற்கிலும் கிழக்கில் வங்க கடலும் மேற்கில் அளங்களும் சூழ நடுவே அமைந்துள்ளது.! தல மரம் இலந்தை மரம் / தீர்த்தம் வங்க கடல் .!

No comments:

Post a Comment