எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, September 23, 2018

வில்வ நாயகி சமேத துளஸீஸ்வரர்

அகத்தியர் @  ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை சுகவனேஸ்வரர் திருக்கோவில்... சேலம்...

பெரிய ஆஞ்சநேயர் ஆம்பூர் வேலூர் சனி பகவான் ஆஞ்சநேயரின் கமல திருபாதத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். சனியின் தலை அவரின் இடது திருபாதத்தின் கீழ் அகப்பட்டுள்ளது, சனியின் கால்கள் அவரின் வலது திருபாதத்தின் கீழ் உள்ளது. சனி பகவானின் முகம் யாரையும் நோக்காமல் பூமியை நோக்கியுள்ளது. கங்கணமும் கேயுரமும் அணிந்துள்ள அவரது இடது திருக்கரம் சௌகந்திகா மலரின் தண்டை பிடித்திருக்கிறது. பூத்தும் பூக்காத அம்மலர் அவரின் இடது தோளுக்கு மேல் தெரிகிறது.

மார்பினில் மூன்று மணிமாலைகள் அணிந்துள்ளார். அவர் அணிந்திருக்கும் முப்புரி நூல் அழகாக பிரகாசமாக தோளிலிருந்து நளினமாக இறங்குகிறது. அவரது வால் தலைக்கு மேல் உயர்ந்து நுணி வளைந்து அதில் மணியுடன் காணப்படுகிறது. அவரது வலது திருக்கரம் அபயம் என்று பக்தர்களுக்கு கூறுகிறது. காதுகளை குண்டலங்கள் அலங்கரிக்கின்றன

பிரம்மசாரிகளுக்கே உள்ளது போல் சிகை அலங்காரம். தலையை சுற்றி அணிந்திருக்கும் அணிகலம் கீரிடம் போல் இருக்கிறது. பிரகாசமான கண்கள் காருண்யத்தை பக்தர்களுக்கு அள்ளி வழங்குகிறது .. http://anumar.vayusutha.in/kovil120.html.


சாந்த நாயகி சமேத நாகநாத சுவாமி திருக்கோயில் - தெற்காலத்தூர் கிராமம், கீழ்வேலூர் தாலுக்கா, நாகை மாவட்டம்.


1000 ஆண்டுகள் மேல் பழமையான திருக்கோயில். நாக ராஜனுக்கு நாகதோஷம் ஏற்பட்ட பொழுது, ஒரு அசிரீரி குரல் அவரை தெற்காலத்தூர் சென்று வழிபட்டால் தோஷம் விலகும் என்று கூறக்கேட்டு, நாகராஜர் பூஜை செய்த தலம். நாக தோஷம் நீக்கும் பரிகார தலம். இதற்கு முன் திருக்கோயில் கும்பாபிஷேகம் 150 ஆண்டுகள் முன்னர் நடைபெற்றதாக ஊர் மக்கள் கூறும் செவி வழி செய்தி.



நாக கன்னி இன்னும் அங்கு உலவுவதாக ஐதீகம். இன்றும் நாகங்கள் கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் இருப்பதாகவும் ஆனால் ஒருவரையும் தீண்டியது இல்லை/தீண்டி யாரும் பலியானது இல்லை என்கிறார்கள் ஊர் மக்கள்.கடந்த 20 ஆண்டுகளாக, அனைத்து தெய்வங்களும் சிறிய குடிசையில் உள்ளனர்.



இப்திருப்பணிக்கு தங்களால் முடிந்த பொருளுதவி செய்து, பல தலைமுறைகள் கடந்து நடைபெறும் இப்பூணரமைப்பு பணியில் பங்கேற்று இறை அருள் பெறுமாறு அன்போடு வேண்டுகிறோம்.தொடர்புக்கு - vaidehi97@gmail.com

மகரிஷி அகத்திய பெருமான் தனிப்பெருங்கருணையால்... தவம் பெற்ற நாயகி திருக்கோவில் (திருவோலக்கம் பாறை, ராஜபாளையம்).. ஊசி முனையில் ஒற்றை காலில் தவம் புரியும் தவம் பெற்ற நாயகி அம்மன் கோவில் தரிசனம்...


ஸ்ரீ வில்வநாயகி சமேத துளஸீஸ்வரர். இந்த கோயில் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து 4 கி.மீ உள்ளே உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. https://tut-temple.blogspot.com/2018/06/blog-post_37.html
மாமண்டூர் குகைகள் என்பது திருவண்ணாமலை மாவட்டம். வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள மாமண்டூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள குகைகள் ஆகும். இது பல்லவர் காலத்திய குடைவரைக் குகைகள் ஆகும். இக்குகைகள் இயற்கையாக அமைந்த குன்றினை இணைத்து ஏற்படுத்தப்பட்ட பெரிய ஏரியின் கரைகளின் மீது அமைந்துள்ளன.
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இடங்களுள் இதுவும் ஒன்று. இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் இக்கோயில்கள், ஏழாம் நூற்றாண்டின் பல்லவ அரசன் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டதாக காணப்படுகிறது. முதல் குகையில் காணப்படும் முதன்மைக் கடவுள் நரசிம்மர் இரண்டாவது குகை சைவ ருத்திரவலீசுவரம் குகை என பிந்தைய கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது.
நந்தியின் வாயிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டே இருக்கும் அதிசயம் !! ரத்தம் போல் வழியும் திரவம்.... அதிசய நந்தி ! பொதுவாக எல்லா சிவன் கோவிலிலும் நந்தி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் சிவகங்கை இலங்குடி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் சற்றே வித்தியாசமான சிறப்பு வாய்ந்த ஒரு அதிசய நந்தி சிலை உள்ளது.
ஆம், அப்படி என்ன சிறப்பு என்றால், பல நூறு ஆண்டுகளாக இந்த நந்தியின் வாயில் இருந்து வித்தியாசமான ரத்தம் போன்ற திரவம் வழிந்தபடியே உள்ளது. அந்த அதிசய நந்தி சிலையை பற்றி பார்ப்போம்.....
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது 'இலங்குடி" என்ற கிராமம். பல ஆண்டு காலத்திற்கு முன்பாக இந்த கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலின் வெளிப்புறம் அமைக்கப்பட்ட நந்தி சிலையின் வாய்பகுதியில் இருந்து ஒரு திரவம் எப்பொழுதுமே சுரந்து கொண்டே இருக்கிறது. இந்த திரவம் பார்ப்பதற்கு எண்ணெய் போன்று வழவழப்பாக உள்ளது. நறுமணமும் எண்ணெய் போன்றே உள்ளது. தொடர்ந்து வழிந்து கொண்டே இருக்கும் இந்த திரவத்தால் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பட்டு ஆடையும் நனைந்தப்படியே உள்ளது. பக்தர்கள் இந்த திரவத்தை பிரசாதமாக நெற்றியில் இட்டுக்கொள்கின்றனர். இந்த நந்தி சிலையை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் இது எப்படி சாத்தியம் என அதிர்ச்சி அடைந்தனர். அந்த நந்தி சிலையை அந்த இடத்தில் இருந்து ஒரு அடி நகர்த்தி வைத்தும் ரத்தம் வடிந்தபடியே தான் இருந்தது. அந்த ஊர் மக்கள், சிலையின் திரவ சுரப்பையே தங்கள் கால கடிகாரமாக நம்பி விவசாயம் செய்வதாக கூறுகிறார்கள். சிலையில் திரவம் அதிகமாக சுரந்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும் என நம்புகின்றனர். அங்கு எத்தனையோ கற்சிலைகள் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நந்தி சிலையில் இருந்து மட்டும் எப்படி அந்த திரவம் வழிகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
கிரக வக்கிரம் அறியும் துல்லிய முறை
ஒரு கிரகம் இருக்கும் நட்சத்திரத்தில் இருந்து 10 நட்சத்திரத்தில் சூரியன் செல்லும் போது, அந்த கிரகம் வக்கிரம் பெறும். அது போல சூரியன் 21 நட்சத்திரத்தில் பயணிக்கும் போது அந்த கிரகம் வக்கிர நிவர்த்தி அடையும்.
உதாரணமாக குரு இருக்கும் நட்சத்திரம் அனுஷம் என கொள்க. அதன் 10 நட்சத்திரமான உத்திரட்டாதியில் சூரியன் இருக்கும் போது குரு வக்கிரம் பெறும். அது போல குரு இருக்கும் நட்சத்திரம் அனுசத்தில் இருந்து 21 வது நட்சத்திரம் மகத்தில் சூரியன் இருக்கும் போது குரு வக்கிர நிவர்த்தி அடையும்.
பொதுவாக சூரியனுக்கு 5, 6, 7, 8, 9 ல் இருக்கும் கிரகம் வக்கிரம் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் 5 மற்றும் 9 இடத்தில் வக்கிரமா or இல்லையா என்ற குழப்பம் ஏற்படும். இதை தெளிவாக அறிய இம்முறை உதவும்..

செங்கல்பட்டு, பழைய சீவரத்தில், வெங்கடேசர் சங்குசக்கரத்துடன் திருமாலாகவும் ஜடாமுடியும் நெற்றிக்கண்ணும் கொண்டு ஈசனாகவும், கையிலும் திருவடிகளிலும் தாமரை மலர் கொண்டு நான்முகனாகவும் மும்மூர்த்திகளின் சங்கமமாக விளங்குகிறார். 



சென்னைவேலூர் வழியில் காவேரிப்பாக்கத்தில் சந்திரனின் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி, பெருமாளை நோக்கித் தவமிருந்து தன் கணவரின் சாபத்தைப் போக்கினாள். மூன்றாம் பிறையன்று திருவோண நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபாடு செய்ய, நினைத்தது நிறைவேறுகிறது.


ஹைதராபாத்உஸ்மான் சாகர் ஏரிக்கரை, சிலுகூரிலுள்ள பெருமாள், வேண்டுவோருக்கு வெளிநாடு செல்ல விசா உடனே கிடைக்க அருள்வதால், இவர் விசாவேங்கடேசப் பெருமாள் எனப்படுகிறார்.

தஞ்சாவூர், வரகூரில் உள்ள வெங்கடேசப் பெருமாளுக்கு, வேலை கிடைத்து வெளியூர் செல்லும் இவ்வூர் இளைஞர்கள் தங்கள் முதல் மாத சம்பளத்தை அனுப்பி வைக்கிறார்கள்.

திருச்சி அருகே குணசீலத்தில் செங்கோல் ஏந்திய பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துகிறார்.

ஈரோடு, பெருந்துறையில், வேப்பமரத்தடியில் ஐந்து கற்கள் வடிவத்தில் வன வேங்கடேசப் பெருமாளும் தாயாரும் அருள்கிறார்கள்.

கரூரில் உள்ள கல்யாண வெங்கடரமணர், மூன்றாம் குலோத்துங்க சோழனின் அரசவைப் புலவரான டங்கணாச்சாரி எனும் பக்தருக்காக இத் தலத்தில் நிலைகொண்டார்.

செங்கல்பட்டு, அமிர்தபுரியில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் கருடனின் கையில் உள்ள வாசுகி பாம்பிற்கு அபிஷேகம் செய்யப்படும் பால் நீலநிறமாகிறது. எனவே, இது சர்ப்பதோஷ நிவர்த்தித் தலமாகும்.

கோயமுத்தூர், உடுமலைப்பேட்டையில், கருவறையில் பெருமாளும் அனுமனும் சேர்ந்திருக்க, இது, சீனிவாசஆஞ்சநேயர் கோயிலாயிற்று.

கிருஷ்ணகிரி, ஓசூரில் மலை மீது சிலை கொண்டுள்ள பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் திருடு போன பொருள் கிடைத்து விடுகிறது.

கோயமுத்தூர், மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் துளசி, வேம்பு, வெள்ளெருக்குபூ மொட்டு, அரளி, ஊஞ்சற்கரி, எலுமிச்சைச்சாறு ஆகியவை கலந்த மல்லிப்பொட்டு எனும் பிரசாதம் தருகிறார்கள். இது வெண்குஷ்டத்தை நீக்குகிறது.

சேலம், செவ்வாய்ப்பேட்டை, பிரசன்ன வெங்கடேசர் கோயிலில் உள்ள கருடாழ்வாருக்கு வஸ்திரம் சாத்தி வணங்க அனைத்து தோஷங்களும் நீங்குகின்றன.

திண்டுக்கல், மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில், மார்கழி மாதம் முழுவதும், இத்தல ஆண்டாள் சூடிக் களைந்த மலர் மாலைகளையே பெருமாளுக்கு சாத்துகிறார்கள்.

திருநெல்வேலி, உதயநேரிபாலாமடையில் அருளும் வெங்கடாஜலபதி அபிஷேகப் பாலை பிரசாதமாக அருந்தினால் மன, சரும நோய்கள் குணமாகின்றன. திருநெல்வேலி, சன்யாசி கிராமத்தில் உள்ள கல்யாண சீனிவாசர் ஆலய கருவறை விமானமும் திருப்பதியைப் போலவே ஆனந்த விமானம் என்று அழைக்கப்படுகிறது.

திருவாரூர், குடவாசல் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலய நரசிம்மர் கடன் தொல்லை நீக்குகிறார். ஞாயிறன்று விரதமிருந்து கருடனை வணங்க மழலை வரம் கிட்டுகிறது.

திருநெல்வேலி, கருங்குளத்தில், மன்னன் சுபகண்டன் இரண்டு சந்தனக் கட்டைகளை பிரதிஷ்டை செய்து வெங்கடாஜலபதியாக வழிபட்டான். இதய நோய்களைத் தீர்க்கிறார், இந்தப் பெருமாள்.  திருநெல்வேலி, மேலத்திருவேங்கடநாதபுரத்தில் திருவேங்கடமுடையான் கருவறையில் 12 ஆழ்வார்களும் 12 படிகளாக உள்ளார்கள். திருவண்ணாமலை, நல்லூரில், சுந்தரவரத ராஜரின் திருவடி கீழ் உள்ள கருடாழ்வார், பக்தர்களின் பிரார்த்தனையை பெருமாளிடம் பரிந்துரைப்பதால், இவர் பரிந்துரைக்கும் கருடன் எனப்படுகிறார். தூத்துக்குடி, புன்னைநகரில் பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளின் ஏகாந்த சேவையை வியாழன்தோறும் தரிசித்தால் கிரக தோஷங்கள் நீங்குகின்றன.

ஆணையூர்சங்கரன்கோவிலுக்கு    அருகில்  உள்ள விமானத்தின்             ஸ்ரீசக்கரம்

திருக்கோயிலுர் அருகில் தகிடி என்ற இடத்தில் உள்ள அழகினார் சிவ ஆலயம்..

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் இருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள அண்டம்பள்ளம் என்னும் கிராமத்தில் வயல் வெளிகளுக்கு இடையே இடிந்து போன சுவர்களுக்கு நடுவில் வெட்டவெளியில் ஒரு வேளை பூஜை கூட இல்லாத நிலையில் வெயிலிலும் மழையிலும் நனைந்த நிலையில் முள் புதார்களுக்கு நடுவில் கட்டுவதற்கு மாற்று துணி கூட இல்லாத நிலையில் அழகிய திருமேனியோடு நமது தந்தை ஈசன் உள்ளார். வழி: திருவண்ணாமலையில் இருந்து ரயில் பயணம் மூலம் திருக்கோவிலூர் வழியாக விழுப்புரம் செல்லும் ரயிலில் அண்டம்பள்ளம் ஸ்டேஷனில் இறங்கவும்.:deciduous_tree:

திருவெண்காடு மேல கோபுர வாசலில் இருந்து ஒன்று அல்லது இரண்டு கிலோ தொலைவில் உள்ள சிறு கிராமமே ஆரண்யேஸ்வரம் அல்லது திருக்காட்டுப்பள்ளி என்பதாகும். அங்கு உள்ளது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆரண்ய சுந்தரேஸ்வரர் ஆலயம். இந்த இடம் சீர்காழியில் இருந்து சுமார் 14 கிலோ தொலைவில் உள்ளது. ஆரண்யேஸ்வரம் செல்ல வேண்டும் எனில் திருவெண்காடு சென்ற பின் அங்கிருந்து அண்ணன்பேட்டை சாலையை சென்றடைந்து, அங்கிருந்து ஆரண்ய சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு செல்லலாம்.

"கோயில் கண்ணாப்பூர் அ/மி. நடுதறிநாதர் திருக்கோயில் இறைவர் திருப்பெயர் : வஸ்ததம்பபுரீஸ்வரர், நடுதறியப்பர், நடுதறிநாதர். இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வல்லிநாயகி, மாதுமையம்மை தல மரம் : கல்பனை (பனை மரத்தில் ஒருவகை - தற்போதில்லை.) தீர்த்தம் : சிவகங்கை. வழிபட்டோர் : இடும்பன். தேவாரப் பாடல்கள் : அப்பர் - மாதினையோர் கூறுகந்தாய். https://santhipriya.com/

ஆலயத்தின் இன்னொரு அதிசயம் என்ன என்றால் ஆலய வளாகத்துக்குளேயே அமைந்து உள்ள சிறு ஆலயத்தில் உள்ள சன்னதியில் வினாயகப் பெருமான் மூஞ்சூருக்கு பதிலாக நண்டு ஒன்றின் மீது அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார்.

மணவூர் நந்தீஸ்வரர் link


திருவாலீஸ்வரர் , கோடம்பாக்கம்

கத்தியவாடி ஏகாம்பரேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம்கத்தியவாடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்

அகத்தியவாடி என்பது கத்தியவாடியாக மருவிட்டது....  தெய்வத் தமிழ் எங்கனம் மருவினாலும். மருமலரே..... மறுமலர்ச்சியே..!

https://en.wikipedia.org/wiki/Yaganti_temple

நந்திவரம் தரும் நந்திவாரம் - நந்திவரம் கூடுவாஞ்சேரி..,

அருள்மிகு மகாகாளேஸ்வரர், அனந்தபத்மநாபர் காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 . கி.மீ , பெரிய காஞ்சிபுரம் அன்னதானக்கூடம் சாலைத்தெரு (சந்தர்ப்பணை) பின்புறம்.

No comments:

Post a Comment