எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, December 22, 2019

சேஷாத்ரி அவதாரத் தலம்

சுந்தரவதனப் பெருமாள்!

ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரவதனப் பெருமாள் இங்கு அருள்புரிகிறார். திருக்கோயில் மிகவும் பழமையானது. சுந்தரவதனன் என்ற பெயருக்கு ஏற்ப பெருமாளின் ரூபம் மிகவும் அழகு வாய்ந்தது. திருக்குளத்தை ஒளவை குளம் என்று அழைக்கிறார்கள். இக்குளத்தில் நீர் வற்றுவதே இல்லை.

சேஷாத்ரி அவதரித்தார்!
 இவ்வூரில்தான் மகான் சேஷாத்ரி சுவாமிகள் அவதரித்ததாக வரலாறு சொல்கிறது. சேஷாத்ரி சுவாமிகளின் குடும்பத்தார் வழிபட்ட புனிதமான துளசி மாடம் பெருமாள் கோயிலில் இருக்கிறது. அவ்வை குளத்தில் சேஷாத்ரி சுவாமிகள் ஜெபம் செய்து கொண்டிருந்த தருணத்தில் பகவான் கிருஷ்ணன் அவருக்கு காட்சியளித்ததாக சொல்லப்படுகிறது.
 திருத்தலம் நிறைந்த ஊர்!
 காமரசவல்லி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளும் திருக்கோயிலும் வழூரில் இருக்கிறது. இங்குள்ள 20 கல்வெட்டுகளில் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பொன்னியம்மன் ஆலயம், முத்துநாயகி அம்மன் ஆலயம் ஆகியவையும் பழமையைப் பறைசாற்றுகின்றன.
New Light Year 2020 <---- Click On
அமைவிடம்:
 காஞ்சிபுரம் - வந்தவாசி இடையே வந்தவாசியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது வழூர் அகரம் கிராமம்.

No comments:

Post a Comment