மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். 2
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே." 3
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய், கதியாய் விதியாய்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே!" 4
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்! 5
அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே. 7
தரணிதனில் அறுபத்து அறுகோடி தீர்த்தமும்சரவ ணத்துள் அடக்கம்சாற்றுமோர் எழுகோடி மந்திரங் களுமுன்சடாக்ஷ ரத்துள் அடக்கம்விரதமிகு நவகோடி சித்தர்களும் உனதுசுபவீக்ஷணத் தனில் அடக்கம்மேலான தேவால யங்களும்உன் ஆறுபடைவீட்டி னிற்குள் அடக்கம்இரவிமுதல் முப்பது முக்கோடி தேவருமுன்இதயக் கமலத் தடக்கம்ஈரேழு புவனமுதல் அண்டங்கள் பலவும்உன்இடத்தினில் அடக்கம் ஐயா. 9
வள்ளி குஞ்சரி மணாளா
வனசமலர் அயன்மதனை அருள்சரச கோபாலன்
மருகச ரவண முருகனே
No comments:
Post a Comment