•••அப்போதும் கூட பூர்ணாஹுதி குடுக்கும் வரை பெரியவா வரவேயில்லை. பாட்டிக்கு ஒரே சோகம். ஹோமப்ரஸாதம் எடுத்துக் கொண்டு பெரியவாளை தர்சனம் பண்ணச் சென்றாள்.
••• "பெரியவா ஹோமத்துக்கு வர்றதா சொன்னேள். ஆனா, வராம இருந்துட்டேளே!" தன் ஆதங்கத்தை பெரியவாளிடம் புலம்பினாள். அழகாக சிரித்துக் கொண்டே அவள்சொல்வதைக் கேட்டார்.
••• "நா, ஹோமத்துக்கு வரலேன்னு யார் சொன்னா? வந்தேனே!.."
••• பாட்டிக்கு ஒண்ணும் புரியவில்லை...................... வந்தாரா?
••• "என்னது? பெரியவா வந்தேளா? நேக்கு ஒண்ணும் புரியலே..."
••• "ஹோமத்தை போட்டோ எடுத்தியா?"
••• "எடுத்தா....."
••• "அதை ப்ரிண்ட் போட்டுப் பாரு"
••• பாட்டி உடனேயே போட்டோ எடுத்தவனை அதை ப்ரிண்ட் போடத் துரத்தினாள். வந்ததும் அவைகளைப் பார்த்தபோது, அதில் ஒன்று பூர்ணாஹுதி நடந்தபோது எடுக்கப்பட்ட படம்......
••• அந்த அக்னி ஜ்வாலை ஒரு ஆள் உயரத்திற்கு எழும்பி எரிகிறது.....அந்த ஜ்வாலை ஸாக்ஷாத் பெரியவா தண்டத்துடன் நிற்பது போலவே எரிந்து கொண்டிருந்தது! அந்த போட்டோ இன்றும் சேலத்தில் உள்ள ஸ்ரீ பெரியவா க்ருஹத்தில் உள்ளது.
••• "நா, ஹோமத்துக்கு வரலேன்னு யார் சொன்னா? வந்தேனே!.." பெரியவா சொன்னது எத்தனை சத்யம்!! பஞ்ச பூதங்களையும் படைத்தவன் எவனோ, அவனே இங்கே அக்னிஸ்வரூபமாக ப்ரத்யக்ஷமாக நிற்கிறான்!!
••• இதில் நம்முடைய பக்தியை விட, மஹான்களின் பரம கருணை, அவ்யாஜ கருணை ஒன்றினால் மட்டுமே இம்மாதிரி நடக்கும்.
===============================================
••• இந்த மேற்க்கண்ட பதிவை Chellappan Sairam.. அவர்கள்..., பற்பல மாதங்களுக்கு முன் பதிந்திருந்தார்கள்... .. பலரிடம் கேட்டிடுந்தேன்... ,
••• ஏதேற்ச்சியாக... இரு தினங்களுக்கு முன் sage of kanchi group'sல் Saraswathi Thyagarajan என்ற அன்பர் ..யாகத்தில் .. (சித்தர்களால் “கனிந்த கனி” என்றழைக்கப்படும்) மஹாபெரியவா படத்தை... பதிந்திருந்தார்..
••• அன்னாரிடம்... மேற்கூறிய *ஹோமானுபூதியில்* கனிந்த படமா இது.. என்ற உறுதி படுத்த கேட்டபொழுது அவரும்... “ஆமாம்” ..என்றார் ..,
••• காஞ்சிகாமாட்சி அம்மாள்.. ஆலய தரிசன விதி முறை பற்றி அறிய
•பல(த்த)• ஆன்மீக இரகசியங்களை உள்ளடக்கிய... டிசம்பர் 1993 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழின் .., 2ஆம் பக்கம்.. பாருங்கள்.....
No comments:
Post a Comment