நன்மையுள்ள சற்குருவாற் காண வேண்டும்
ஓட்டமென்ற வோட்டமெல்லாம் வோடா தேநீ
ஒருமனதாய் சுழிமுனையிலு கந்து நில்லு
ஆட்டமென்ற திருநடன மங்கே யுண்டு
ஐம்பத்தோ ரெழுத்துமுத லெல்லா முண்டு
பாட்டைமிக பதத்தினா லென்ன வுண்டு
பத்திமுத்தி வைராக்கிய மாகப் பாரே.
பராபரத் தினிருப்பிடத்தை பாரார் பாரார்
சாரப்பா வுலகத்தில் யோகஞ் செய்வார்
சார்ந்திருக்கும் பரஞ்சோதி தன்னைக் காணார்
ஊரப்பா கிரியையென்றேயு ழலு வார்கள்
உத்தமனே உள்ளுயிரையறி யமாட் டார்கள்
நேரப்பா சரியையென்பார் தனக் குள்ளே
நெருப்பாருந் திருக்கோயில் கண்டி லாரே
ஐயா, பாடலின் விளக்கம் கூறவும்...
ReplyDelete