எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, September 12, 2025

எளிய இயற்கை வைத்தியம்

தாது என்பது விந்து
தாது பலப்பட
ஓரிதழ் தாமரை இலையை நாள்தோறும் விடிவதற்கு முன் சிறிதளவு மென்று தின்று பால் அருந்தி வர ஒரு மண்டலத்தில் தாது பலவீனம் தீரும்
அம்மான் பச்சரிசி இலையை தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிட்டு வர தாது பலப்படும்
அம்மான் பச்சரிசியை கீழாநெல்லியுடன் சமன் கலந்து காலை மதியம் இரு வேலையும் எருமை தயிரில் உண்ண தாது இழப்பு தீரும்
கருவேலம் பிசின் நெய்யில் வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட தாது பலப்படும்
ஒரு கிராம் தாமரை விதையை அரைத்து பாலில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர தாது வளர்ச்சி அடையும்
துளசி விதை சூரணம் ஐந்து அரிசி எடை தாம்பூலத்துடன் சேர்த்துக்கொள்ள தாது கட்டும்
வறுத்த திப்பிலி பொடி அரை கிராம் தேனில் காலை மாலை கொடுத்து வர தாது இழப்பு தீரும்
கோரைக்கிழங்கு சூரணம் ஒரு கிராம் காலை மாலை தேனில் கொள்ள தாது விருத்தி உண்டாகும்
தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாது பலம் மிகும்
பிரண்டை உப்புடன் சாதிக்காய் சூரணம் சேர்த்து நெய்யில் கொடுக்க தாது இழப்பு தீரும்
தாலிக் கீரையை பருப்புடன் சமைத்து நெய் சேர்த்து உண்டு வர விந்து இழப்பு நீங்கி தாது பலப்படும் உடல் குளிரும்
விடத்தேர் பிசினை உலர்த்தி பொடித்து மூன்று கிராம் சிறிது கல்கண்டு பொடியுடன் பாலில் கலந்து சாப்பிட தாது பலம் மிகும்
பிராயன் பாலில் தேவையான அளவு வறுத்த கடலை மாவு பிசைந்து பட்டாணி அளவு மாத்திரை ஆக்கி காலை மாலை இரண்டு மாத்திரை சாப்பிட்டு வர தாது பலம் மிகும்.
குமரி என்னை காலை மாலை ஒரு தேக்கரண்டி கொடுக்க தாது இழப்பு தீரும் காரம் புளி நீக்க உணவு கொள்க
கானா வாலை சமூகம் தூதுவேளை பூ முருங்கைப்பூ ஒரு குவளை நீரில் போட்டு பாதியாக காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து ஒரு மண்டலம் கொள்ள தாது பலப்படும்
வாழைப்பூவை பருப்புடன் சமைத்து உண்ண தாது விருத்தி அடையும்
காரை பழத்தினை காலை மாலை உண்டுவர உள் வெப்பமகன்று தாது பலப்படும்
நீர்முள்ளி விதை சூரணம் 40 கிராம் நெருஞ்சில் விதை 20 கிராம் வெள்ளரி விதை 10 கிராம் சிதைத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லி லிட்டராக காய்ச்சி பனங்கல்கண்டு கலந்து காலை மாலை 100 மில்லி அளவாக ஒரு வாரம் கொள்ள தாது பலம் உண்டாகும்.

No comments:

Post a Comment