எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, September 11, 2025

காஞ்சி

 காமாக்ஷி தத்துவம்

'காம' என்னும் 51 அக்ஷரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாக்ஷி. 'கா' என்றால் ஒன்று. 'ம' என்றால் ஐந்து. 'க்ஷி' என்றால் ஆறு, அதாவது ஐந்து திரு நாமங்களையும் சக்தி பேதம் மூன்று, சிவ பேதம் இரண்டு, விஷ்ணு பேதம் ஒன்று என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவள்.

மற்றும் 'கா' என்றால் சரஸ்வதி. 'மா' என்றால் மகேஸ்வரி. 'க்ஷி' என்றால் லக்ஷ்மி. அக்ஷி என்றால் கண்.

அக்ஷியை தன் பெயருடன் உள்ள அம்பிகைகள் காமாக்ஷியைத் தவிர்த்து

மீனாக்ஷி (மீனைப் போன்ற கண்ணையுடையவள்)
விசாலாக்ஷி (விசாலமான கண்களையுடைவள்)
நீலாயதாக்ஷி (நீலோத்பல மலர் போன்ற கண் கலையுடையவள்)
பங்கஜாக்ஷி (தாமரைப் போன்ற கண்களை உடையவள்)
முதலியவர்கள். இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள் காமாக்ஷி.

அம்பிகையின் கடைக்கண் கடாக்ஷம் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே இந்த அம்பிகைகளின் பெயர்கள் எல்லாம் (அக்ஷி) கண்கள் சம்பந்தமாகவே இருக்கின்றன போலும்.

காஞ்சியில் 5000 சக்தி ஆலயங்கள் இருந்ததாக காஞ்சிபுராணம் கூறுகிறது.
காமாட்சி ஆலயமுள்ள காமகோட்டத்திற்கு ஸ்ரீபுரம், பத்மநாயகம், ஜீவன்முக்திபுரம், காமகோடி என்ற பெயர்கள் உண்டு. வசிஷ்டரால் ராமனுக்கு உபதேசிக்கப்பட்ட "சிந்தாமணி" என்ற தந்திர நூலில் பஞ்சபூத பிடங்களில் ஒன்றான ஆகாச பீடமே இக்காமக் கோட்டம் என்று கூறப்பட்டிருக்கிறது.

இங்கு 108 சிவாலயங்களும் 18 விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. பாடல்பெற்ற பதிகளில் புகழ் பெற்றது காஞ்சி மாநகரம் இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய திருத்தலத்தில் அருள் பாலிக்கும் எண்ணற்ற திருச் சன்னிதிகளை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியவர்கள் பாக்யசாலிகள். இயலாதவர்கள் இந்த எழுபத்தி ஒரு சன்னிதிகளை நினைவிற்கொண்டு அருள் பெறலாம் அல்லவா அந்த புனித சன்னிதிகளின் பெயர்கள்:


No comments:

Post a Comment