எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, August 18, 2026

daily worship - vishnu


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
 நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
 அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே. 1

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
 திருப்பவளச் செவ்வாய்தான் தித்திக் திக்குமோ 
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் 
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. 2

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் 
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
 இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே. 3

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான் 
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று 
கருவரங்கத் துள்கிடந்து கைதொழுதேன்
கண்டேன் திருவரங்க மேயான் திசை. 4

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற் றிலையுமெல்லாம் 
கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி, 
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி, 
திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே. 5

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் 
தேனார் பூஞ்சோலைத் திருவேங் கடச்சுனையில்
 மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே. 6

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி 
நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
 உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு நல்வகையால் 
நமோநாராயணா என்று நாமம் பல பரவி
பல்வகையாலும் பவித்திரனே! 
உன்னைப் பல்லாண்டு கூறுவனே. 7

நல்வகையால் நமோ நாராயணா வென்று நாமம்
 பல பரவி பல்வகையாலும் பவித்திரனே 
உன்னைப் பல்லாண்டு கூறுவனே!  8

No comments:

Post a Comment